ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கோதையை ஆளும் அவளவனே(ராதை மனதில் 2)-கதைத் திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
வணக்கம். சகி உடல் நலமோ மனநலமோ சரியில்லை என்றால் கவலை விடுங்கள். எல்லாம் ஒரு நாள் மாறும். ஆனால் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளியுங்கள் சகி.நீங்கள் பதில் அளிக்காமல் இருப்பது ரசிகருக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை ஏற்படுத்தும். மேலும் கதைக்கும் தடங்களை ஏற்படுத்தும். நான் கூறுவது உங்கள் மனதைக் காயப்படுத்தினால் மன்னிக்கவும்.
மன்னிச்சிடங்க மா..இன்னிக்கு தான் ஆன்லைன் வரேன்... இனி யூடி ரெகுலரா வரும்
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 39



விஜயா அகல்யாவை தூக்கிக் கொண்டு வர, ஆறுமுகம் மற்றும் பிரகாஷின் கைகளில் சில பொம்மைகளும் இருந்தது.



"விஜய் வந்துட்டியா?" என்று கேட்டபடி உள்ளே வந்தார் விஜயா.



"அம்மா, என் கிட்ட நீங்க லாவண்யா வீட்டுக்கு போறேன்னு சொல்லவே இல்ல?" என்று சற்று கடுப்பாக கேட்டான் விஜய்.



"அது தான் நேத்து பேசிட்டு இருந்தோமே பா"



"கோதைக்கு தான் உடம்பு சரி இல்லைனு தெரியுதுல... அதை விட லாவண்யா வீட்டுக்கு போறது ரொம்ப முக்கியமா?" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் விஜய்.



"இல்லை ப்பா, கோதை சமாளிச்சுடுவேன்னு சொன்னாள்" என்று கலக்கமான குரலில் அன்னை கூற,



"சரி விடுங்க மா, நான் அவளுக்கு ஊசி போட்டு இருக்கேன்" என்று கூறினான்.



"விஜய், அவளுடைய ரெண்டு கையும் கண்ணி போய் இருக்கு பா, அதுக்கு ஏதாவது மருந்து இருக்கா?" என்று விஜயா கேட்க,



'என்னால தான் அவளுக்கு இந்த நிலைமைனு அம்மா கிட்ட சொல்லல போல!' என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே,



"நேத்து நைட் வரைக்கும் கோதை நல்லா தானே விஜயா இருந்தாள்?" என்று ஆறுமுகம் கேட்க,



"ஆமாங்க, மாடியில் நேத்து நைட் பாட்டு கேட்க போனாளாம்... கீழே இறங்கும் போது விழுந்துட்டாளாம், அதனால கை அப்படி ஆகிருச்சாம். அப்படியே காய்ச்சலும் வந்துருச்சு" என்று விவரமாக கூறினார்.



பிரகாஷோ, எதுவும் பேசாமல் அவன் அறைக்குள் புகுந்துக் கொள்ள, "அம்மா, நான் வெளியே போயிட்டு வரேன்" என்று வாசலுக்குச் சென்ற விஜய்யிடம்,



"காபி குடிச்சிட்டு போகலாம் விஜய்" என்று அன்னை கூறினார்.



"இல்ல ம்மா, நான் போயிட்டு வந்துடுறேன் நீங்க கோதையை பத்திரமா பார்த்துக்கோங்க" என்று கூறி விட்டு வெளியில் சென்றான்.



"இவன் நினைச்சா கோதையை துன்புறுத்துறான், தீடிர்னு அக்கறையா பார்த்துக்க சொல்றான். இவனை புரிஞ்சுக்கவே முடியல விஜயா" என்று டைனிங் ஹாலில் ஆறுமுகம் கூற, தன்னுடைய அறையில் படுத்துக் கொண்டு இருந்த கோதைக்கும் அது காதில் விழுந்தது. அவளுடைய மனதிலும் இந்த விஷயம் ஓடிக் கொண்டு தான் இருந்தது.



'சில நேரம் அரக்கன் மாதிரி நடந்துக்குறான், சில நேரம் என் கிட்ட பேசாமல் அமைதியா இருக்கான். இப்போ என்னை உண்மையாகவே அக்கறையா பார்த்துக்கிட்டான்... இவனை புரிஞ்சுக்கவே முடியலையே!' என்று கோதை நினைக்கும் போதே,



'அவன் தானே என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தான் அந்த குற்ற உணர்ச்சி தான்... வேற எதுவும் இருக்காது' என்று தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டாள் கோதை.



"அம்மா கை வேற ரொம்ப வலிக்குதே" என்று மெதுவாக முனங்கியவள், 'அவன் சொன்னது போல கையில ஊசிப் போட்டதுனால உயிர் போற அளவுக்கு கை வலிக்குதே, அதுக்காக நம்ம இடுப்புல எப்படி அவன்கிட்ட ஊசி போட்டுக்க முடியும், ச்ச ஃபோனும் போச்சு, நேத்து நைட் மொபைல் சைலண்ட்டுல வேற போயிடுச்சு, அதனால யார் லாம் கால் பண்ணி இருப்பாங்களோ, டிஸ்பிளே போனதுனால தெரியாது வேற, அம்மா கண்டிப்பா கால் பண்ணி இருப்பாங்க, தாத்தா பாட்டிக் கிட்ட வேற வீக் என்ட் பேசுறேன்னு சொல்லி இருந்தேனே, அம்மா கால் பண்ணிப் பார்த்து நான் எடுக்கலைனு பயந்து இருந்திருப்பாங்களோ' என்று மனதில் யோசித்துக் கொண்டே இருந்தவள், காய்ச்சலிலும் தன் உடம்பில் ஊசி வழியாக ஏற்பட்ட மருந்தின் விளைவாலும் தூங்கியே விட்டிருந்தாள்.



****



"ஏங்க எனக்கு ஒண்ணு புரியவே இல்லை. அந்த பொண்ணு லாவண்யா முன்னாடி எல்லாம் அகல்யா பக்கமே வர மாட்டாள். இன்னைக்கு என்னனா கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா அகல்யாவை தூக்கி கொஞ்சிட்டும் விளையாடிட்டும் இருந்தாள். நம்ம கிட்டயும் முன்னாடி எல்லாம் இவ்வளவு பேசினதே இல்ல. ஆனால் நம்ம கிட்ட நல்லா முகம் கொடுத்து சிரிச்சு பேசுச்சு... அதுவும் இல்லாமல் சாப்பிட்டு தான் போகணும்னு சொல்லி, நல்ல உபசரிப்பு கொடுத்தாங்க!" என்று ஆச்சரியமாக கூறினார் விஜயா.



"ஆமா, விஜயா எனக்கும் அதே அதிர்ச்சி தான்" என்று யோசனையுடன் ஆறுமுகம் கூற,



"விஷயம் ரொம்ப சிம்பிள் அப்பா" என்று கூறிக் கொண்டே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் பிரகாஷ்.



"என்ன விஷயம் பிரகாஷ்?" என்று புரியாமல் கேட்டார் தந்தை.



"நீங்களும் அம்மாவும் லாவண்யாவை பத்தி பேசிட்டு இருந்தீங்களே, அதை பத்தி தான் சொல்ல வந்து இருக்கேன்"



"என்ன ப்பா சொல்ற?" என்று விஜயா அதிர்ச்சியுடன் கேட்க,



"ஆமா ம்மா, லாவண்யா விஜய்யை காதலிக்கும் போது மனசுல சுமையாய் பாரமாய் அகல்யா இருந்தாள். ரெண்டாம் தாரமா மனைவியா வரவங்களே அவங்க கணவனுடைய மூத்த மனைவியுடைய குழந்தையை பார்க்க பிடிக்காமல் இருக்காங்க. அப்படி இருக்கும் பட்சத்துல தனக்கு கணவனாக போறவனுடைய குடிகார அண்ணனுடைய மகளை பார்க்கணும்னு சொன்னால் அவளுக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க."



"உங்க மேலயும் அவளுக்கு கோபம் இருந்திருக்கும். என்ன டா இவங்க ரெண்டு பேரும் பெரிய மகனை திருத்த தெரியாமல் என் மேல பாரத்தை போட்டுட்டாங்களேனு நினைச்சு லாவண்யா பேசாமல் இருந்து இருப்பாள்" என்று கூறி முடித்தவன், வெறுமையாக சிரித்தபடி,



"ஆனால் இப்போ அவளுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை. அகல்யாவை பார்த்துக்க வேணாம். ஏன்னா இனி அவளுக்கும் அகல்யாவுக்கும் தான் சம்மந்தம் இல்லையே! அதனால தான் உங்க கிட்டயும் நல்லா சிரிச்சு பேசினாள். அதே போல அகல்யாவையும் தூக்கி கொஞ்சினாள்" என்று முடித்தான்.



"ஆனால் விஜய் இந்த விஷயத்தை எல்லாம் தெளிவா சொல்லி தானே காதலிச்சான்?" என்று தாய் கூற,



"இருந்தாலும் அவள் ஒரு சராசரி பொண்ணு மா, அதுவும் பணக்கார வீட்டு பொண்ணு... அவள் அப்படி இல்லைனு சொன்னால் தான் நாம ஆச்சரியப்படணும்... எது எப்படியோ அந்த பொண்ணுக்கு இப்போ கல்யாணம் நடக்க போகுது. இனி நமக்கு எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லை" என்று நிம்மதியாக கூறினான்.



"ம்... சரி பிரகாஷ், அகல்யாவுக்கு கேர் டேக்கரும், ஸ்பீச் தெரபிக்கும் ஒருத்தரை அப்பாயிண்ட் பண்ணு" என்று கூறினார் தந்தை.



"ஏங்க, விஜய் ஏற்கனவே ஒரு பொண்ணை ஸ்பீச் தெரபிக்கு பார்த்து வைச்சு இருக்கேன்னு சொன்னானே?" என்று அவசரமாக கூறினார் விஜயா.



"அப்படியா! நான் என்ன நினைக்கிறேன்னா ஸ்பீச் தெரபிக்கும் கேர் டேக்கருக்கும் ஒரே பொண்ணா இருந்தால் பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று யோசனையுடன் கூறினார் ஆறுமுகம்.



"சரிங்க அப்போ விஜய் கிட்ட இதை பத்தி சொல்லவா?" என்று விஜயா கேட்க,



"வேண்டாம் விஜயா, நம்ம இனி அகல்யாவின் விஷயத்தை பத்தி பிரகாஷ் கிட்ட தான் பேசணும். விஜய்க்கு இனி நம்மளால எந்த சுமையும் வர கூடாது. அகல்யாவின் பொறுப்பு இனி பிரகாஷ்க்கு தான்... விஜய்க்கு இல்லை" என்று உறுதியாக கூறினார்.



"சரிங்க ப்பா, ஆனால் விஜய் என் கிட்ட அகல்யாவை நம்பி கொடுப்பானானு தெரியல... அவன் மனசுல நான் இன்னும் குடிகாரன் நிதானமா இல்லைனே நினைக்குறான்னு நினைக்கிறேன்" என்று கவலையுடன் கூறினான் பிரகாஷ்.



"நானும் அம்மாவும் உன்னை நம்ப ஆரம்பிச்சுட்டோம் பிரகாஷ், அதே போல விஜய்யும் நம்புவான். அவன் உன்னை அனலைஸ் பண்ணிட்டு தான் அகல்யாவை கொடுப்பான். அது இருக்கட்டும், நீ அகல்யாவின் பொறுப்பை எடுத்துக்கோ, நான் விஜய் கிட்ட பேசுறேன்" என்று பெருமூச்சு விட்டார் தந்தை.



"நாளைக்கு காலையில் கூட லாவண்யா வரேன்னு சொன்னாங்க ப்பா, விஜய் கிட்ட பேசுறேன்னு சொன்னாங்க. அப்போவாவது விஜய்க்கு என் மேல நம்பிக்கை வருதா னு பார்ப்போம்." என்று பெருமூச்சு விட்டு வெளியேச் சென்றான்.



"எப்படி இருந்தவன் பிரகாஷ்! இப்போ அவனுடைய நிலைமையை நினைச்சாலே கஷ்டமா இருக்கு விஜயா" என்று கவலையுடன் கூறினார் ஆறுமுகம்.



"பிரகாஷ் மாறவே மாட்டான்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால் அவன் இந்தளவு மாறுனதே பெரிய விஷயம்ங்க... அடுத்து பிரகாஷ்க்கு ஒரு கல்யாணம் மட்டும் பண்ணி வைச்சுட்டால் தான் நமக்கு நிம்மதியா இருக்கும். அகல்யாவுக்கும் ஒரு வழி கிடைக்கும்" என்று ஏக்கத்துடன் கூறினார் விஜயா.



"ஆமா விஜயா, முதல்ல பிரகாஷ் கிட்ட பேசணும். அடுத்து விஜய்யையும் கோதையையும் சேர்த்து வைக்கணும்" என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, வீட்டிற்கு உள்ளே நுழைந்தான் விஜய்.



அதை கண்டவுடன் பேசிக் கொண்டு இருந்ததை நிறுத்தினார் ஆறுமுகம்.



"அம்மா, கோதை இப்போ எப்படி இருக்காள்?" என்று விஜய் கேட்க,



'நல்ல வேளை நம்ம பேசினதை இவன் கவனிக்கலை போல!' என்று நினைத்த ஆறுமுகம் நகர்ந்தார்.



"தூங்கிட்டு இருக்கா ப்பா, சரி அது என்ன உன் கையில் ஏதோ புது டப்பா மாதிரி இருக்கு?" என்று அதை பார்த்தபடி மகனிடம் கேட்டார் விஜயா.



 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 40



"அது வந்து... போன் மா" என்று தயங்கியபடியே கூறினான் விஜய்.



"புது போன்னா விஜய்?" என்று ஆர்வமாக கேட்டார் விஜயா.



"ஆமா ம்மா"



"யாருக்கு புது போன் உனக்கா?"



"இல்லை ம்மா... கோதைக்கு"



"என்னது கோதைக்கா! அதுவும் நீ வாங்கி தரியா?" என்று ஆவலுடன் கேட்க,



'ஐயோ! இவங்க உடனே மனசுல ஆயிரம் கனவு கோட்டை கட்டி வைச்சிடுவாங்களே...' என்று சலிப்பாக நினைத்தவன்,



"என்னால தானே ம்மா அவளுடைய போன் உடைஞ்சுது... அதான் புதுசு வாங்கிட்டு வந்து இருக்கேன் போதுமா?" என்று வேகமாக சற்று எரிச்சலாக கூறினான்.



"என்னது கோதையுடைய போன் உன்னால உடைஞ்சுதா? கீழே விழும் போது உடைஞ்சுடுச்சுனு தானே கோதை என் கிட்ட சொன்னா?" என்று சந்தேகத்துடன் கேட்டார் அன்னை.



"ஓ அப்படியா..! எனக்கு இந்த விஷயம் தெரியாதும்மா, நான் என்னவோ நான் தான் அவளுக்கு ஊசி போடும் போது என்னுடைய கை பட்டு ஃபோன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து உடைஞ்சிப் போச்சுனு நினைச்சேன், ஆனால் இப்போ தானே தெரியுது அந்த ஃபோன் ஏற்கனவே உடைஞ்சுப் போனதுனு, ச்ச... இது தெரியாமல் குற்ற உணர்ச்சியில் புது ஃபோனை வேற வாங்கிட்டேன், இதை நானே வெச்சிக்குறேன்" என்று கூறியவன், விஜயாவை உற்று கவனித்தான்.



'அம்மா என்னை நம்பிடுங்க' என்று அவன் மனதில் நினைக்க,



"நீ தான் போன் வாங்கிட்ட இல்லையா?பாவம் டா கோதை, உடம்பு சரி இல்லாமல் இருக்காள். இப்போ அவளுடைய அப்பா அம்மாவை வேற ரொம்ப மிஸ் பண்ணுவாள் போன் உடைஞ்சு போய் ரொம்ப தனிமையில் இருப்பாள். அதனால கொஞ்சம் கோச்சுக்காமல் நீ வாங்குன போனை கோதைக்கே கொடுத்திடு விஜய்" என்று வேண்டுதலாக கேட்டார் அன்னை.



"சரி ம்மா, நீங்க இவ்வளவு கெஞ்சி கேட்குறீங்கன்றதுக்காக நான் இந்த போனை கோதைக்கே கொடுத்திடுறேன். ஆக்சுவலி எனக்கு கோதைக்கு கொடுக்க சுத்தமா மனசு இல்லை தான்... ஆனால் உங்களுக்காக தான் மா, உங்களுக்காக மட்டும் தான்..." என்று பொய்களாக அடுக்கி அவனுடைய அம்மாவையும் நம்ப வைத்தான்.



"ரொம்ப நன்றி விஜய், அம்மாக்காக நீ ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்... சரி உட்காரு... காபி போட்டு தரேன்" என்று கூறினார் அன்னை.



"நீங்க காபி போட்டுட்டே இருங்க மா, நான் ஒரு டாக்டரா கோதையை பார்த்துட்டு வரேன்" என்று அந்த "டாக்டர்" வார்த்தையில் அழுத்தத்தை கொடுத்து கூறினான்.



"சரி விஜய்" என்று கிச்சனிற்குள் விஜயா செல்ல, விஜய்யோ திறந்து இருந்த கோதையின் அறைக்குள் வேகமாகச் சென்றான்.



கோதை உறங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், மெதுவாக அவளின் துயிலின் கலையாதவாறு அவளின் தலையணைக்கு பக்கத்தில் இருந்த செல்போனை எடுத்து சிம்மை கழட்டியவன், தான் புதிதாக வாங்கி இருந்த அந்த பிராண்ட்டட் காஸ்ட்லி போனில் சிம்மை மாத்தினான்.



பழைய போனை தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் போட்டவன், ஒரு சின்ன ஸ்டிக்கி நோட்டில், "I am sorry for my mistake please accept this new phone as a token of forgiveness- VIJAY" ( என்னுடைய தவறுக்கு என்னை மன்னித்து விடு. தயவு செய்து இந்த போனை என்னை மன்னித்ததற்கு அடையாளமாக ஏற்றுக் கொள்- விஜய்) என்று எழுதி விட்டு புது போனின் பக்கத்தில் அதை வைத்து விட்டு, தான் அகல்யாவுக்காக வாங்கி வந்து இருந்த பெரிய சாக்லேட்களில் ஒன்றை அந்த பேப்பரின் மேல் வைத்து விட்டுச் சென்றான்.



டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தவனுக்கு அப்போது தான் மனசு கொஞ்சம் இலகுவாக இருந்தது. விஜயா கையில் காபியுடன் வர,



"அம்மா, இந்த ஸ்பிரேவை கோதை எழுந்த அப்புறம் அவளுடைய கையில் தேய்ச்சு விடுங்க. தொடர்ந்து ரெண்டு நாள் ரெண்டு வேளை மறக்காமல் கண்டிப்பா பண்ணுங்க. சரி ஆகிடும்" என்று கூறி விட்டு காபி குடித்தான்.



"அகல்யா எங்கே?"



"அப்பா கூட வெளியே போய் இருக்காள் விஜய்"



"சரி ம்மா, இதெல்லாம் நான் அகல்யாவுக்கு வாங்கின சாக்லேட்ஸ் வாங்கிக்கோங்க" என்று தன்னிடம் இருந்த சாக்லேட் பாக்ஸ்ஸை கொடுத்து விட்டு அவனின் அறைக்குச் சென்றான்.



தன் அறையில் உள்ள பால்கனியில் நின்று இருந்தவனுக்கு மாலை நேர குளிர் காற்று முகத்தை வருடினாலும் அது அவனின் மனதை வருடவில்லை.



'எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதுனு புரிய மாட்டிங்குதே! அவள் கிட்ட பேச கூடாதுனு நினைச்சாலும் அவள் கிட்ட முரட்டுத்தனமா நடந்துக்குறேன்' என்று தன்னை பற்றியே யோசித்தவனுக்கு தன் மேல் தான் கோபம் வந்தது.



'லிசன் விஜய், கோதை உனக்கு உரிமை இல்லாத பொண்ணு... அதனால உன்னுடைய அதீத கோபத்தை அவள் கிட்ட இனிமேல் நீ காட்ட கூடாது' என்று தனக்குள்ளேயே முடிவு எடுத்தான் தான்...



ஆனால் இப்போதெல்லாம் அவனுக்கே அவனின் முடிவு மீது நம்பிக்கை இல்லாமல் போனது. அதனால் இதற்கு எத்தகைய தீர்வு எடுக்கலாம் என்று யோசிக்க தொடங்கினான்.



இரவு ஒன்பது மணி போல் எழுந்த கோதைக்கு காய்ச்சல் சற்று பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் கை வலி அதிகமாகவே தான் இருந்தது. உடம்பிலும் சோர்வு மற்றும் அலுப்பு இருந்தது.



மெல்ல எழுந்தவளின் கண்ணில் ட்ரெஸ்ஸிங் டேபிளில் ஒரு புது போனும் சாக்லேட்டும் தென்பட,



'என்ன இது?' என்று யோசனையுடன் எழுந்துச் சென்று பார்த்தவளுக்கு, பேரதிர்ச்சியாக இருந்தது.



மொபைலையும் சாக்லேட்டையும் தாண்டி கண்கள் அந்த மஞ்சள் வண்ணம் ஸ்டிக்கி நோட்டில் பதிய அதை எடுத்து படித்தவளுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாய் இருந்தது.



'விஜய்க்கு இந்த மாதிரி எல்லாம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தர மாதிரி விஷயங்கள் பண்ண தெரியுமா? என்னால உன்னை புரிஞ்சுக்கவே முடியல விஜய்!' என்று மனதில் நினைத்தவள், புது போனை எடுத்து பார்த்தாள்.



'ஓ மை காட்! இப்போ மார்க்கெட்டுலேயே இந்த பிராண்ட்டட் போன் தான் ட்ரெண்ட்ல இருக்கு. ரேட் கண்டிப்பா ஐம்பது ஆயிரத்துக்கு மேல தான் இருக்கும். என்னால விஜய் இப்படி பண்ணுவாருனு நம்பவே முடியலையே!' என்று நினைத்தவளின் இதழ் அவளையும் மீறி பிரிந்து புன்னகைத்தது.



ஏனோ இந்த மொபைல், சாக்லேட் முக்கியமாக அவன் எழுதிய அந்த ஸ்டிக்கி நோட், கோதைக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை கொடுத்தது. அதனின் விளைவால் அவளின் கை வலி கூட பெரிதாக தெரியவில்லை அவளுக்கு..!



வெளியே எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் அரவம் கேட்க, போர்வையை பெட்டில் போட்டு விட்டு, ரெஸ்ட்ரூம்க்கு சென்று தன்னை கண்ணாடியில் பார்த்தவள், முகம் சோர்வாக தெரியவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு துப்பட்டாவை அணிந்துக் கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றாள்.



"கோதை, இப்போ எப்படி மா இருக்க?" என்று கேட்டார் ஆறுமுகம்.



"ஹான்... இப்போ கொஞ்சம் பரவாயில்லை அங்கிள்" என்று மெலிதாக புன்னகைத்தாள்.



பிரகாஷ், விஜய்யுமே அங்கே தான் இருந்தனர். விஜய் பேச கூடாது என்று கூறியதால் பிரகாஷ் கோதையிடம் எதையும் பேசவில்லை. விஜய்க்கும் பிரகாஷுக்குமே இப்போது பேச்சு இல்லை.



"முதல்ல சாப்பிடு மா, அப்புறம் மாத்திரை போட்டுட்டு நல்லா தூங்கு" என்று அக்கறையாக கூறினார் விஜயா.



"சரிங்க ஆன்ட்டி" என்று அவள் அமர்ந்து எதிரே பார்க்க, அங்கு விஜய் தான் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.



"இந்தா ம்மா, சூடா இட்லி சாப்பிடு, வாய்க்கு பிடிக்கலைனா சொல்லு கஞ்சி செஞ்சி தரேன்" என்று கூறினார் விஜயா.



"சரிங்க ஆன்ட்டி" என்று கூறியவளுக்கோ விஜய்யிடம் போன் வாங்கி கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.



'நம்ம போன் வாங்கி வைச்சு இருந்ததை பார்த்தாளா இல்லையா னு தெரியலையே! ஒரு வேளை எல்லார் முன்னாடியும் நம்ம கிட்ட போன் பத்தி ஏதாவது கேட்டுட போறாள்... நமக்கு எதிர்ல வேற உட்கார்ந்து இருக்காளே! சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பிடு விஜய்' என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டான்.



"அப்பா, அகல்யா உங்க மேல உட்கார்ந்துட்டே தூங்கிட்டாள், இருங்க ப்பா, நான் வந்து அவளை தூக்கிக்கிறேன்" என்று விஜய் கூற,



"இல்லை விஜய், நீ இப்போ தான் சாப்பிடவே வந்து உட்கார்ந்து இருக்க... நான் சாப்பிட்டு முடிச்சுட்டேன். நான் அகல்யாவை படுக்க வைச்சுக்கிறேன்" என்று தந்தை கூற,



"அவள் நைட் முழிச்சுட்டாள்னா உங்களுக்கும் அம்மாவுக்கும் தூக்கம் போய்டுமே ப்பா, அதனால நான் சாப்பிட்டு முடிச்சிட்டு வந்து அவளை தூக்கிக்கிறேன். அவள் அது வரைக்கும் உங்களுடைய ரூம்க்குள்ள தூங்கட்டும்" என்று விஜய் கூற,



அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த பிரகாஷுக்கோ மனதில், 'என்னால என்னுடைய பொண்ணை என் கூட ரூம்க்குள்ள கூட தூங்க வைக்க முடியல... ச்சே, எனக்கே என்னை நினைச்சால் அசிங்கமா இருக்கு' என்று எண்ணி குமுறினான்.



"இன்னைக்கு ஒரு நாள் எங்களுடைய அறையிலேயே தூங்கட்டும் விஜய், நீ நிம்மதியா சாப்பிட்டு முடிச்சிட்டு தூங்கு" என்று கூறியவர் தன் பேத்தியை தோள்களில் சுமந்துக் கொண்டு வாஷ் பேஸினில் கைகளை கழுவி விட்டு தன்னுடைய அறைக்குள் சென்றார்.



அதற்கு பின்னர் பிரகாஷும் சாப்பிட்டு முடித்து விட்டுச் செல்ல, "என்ன ம்மா இட்லி உன் வாய்க்கு பிடிச்சி இருக்கா?" என்று கேட்டார் விஜயா.



"ஹான்... இட்லியே நல்லா இருக்கு ஆன்ட்டி" என்று தயங்கியபடி கூறிக் கொண்டே சாப்பிட்டாள்.



"அம்மா, நான் சொன்ன ஸ்பிரே மறக்காமல் கோதைக்கு போட்டு விட்டுடுங்க" என்று எழுந்தவன் கை கழுவி விட்டு திரும்ப, அவனின் கண்களில் அது பட்டது.



'என்ன இது மஞ்சள் கயிறு கீழே கிடக்குது!' என்று யோசித்தபடியே அதை எடுத்தவன்,



"அம்மா, இது உங்களோடதா?" என்று விஜயாவிடம் காட்டிக் கேட்டான். அதை கவனித்து பார்த்த கோதை திகைத்தாள்.



விஜயாவோ, "நான் தங்கத்துல தான் சரடு போட்டு இருப்பேன் டா" என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே அவருடைய போன் அலற,



"விஜயா உன் அண்ணன் கால் பண்றாரு" என்று அறையில் இருந்தபடியே சத்தமாக கூறினார் ஆறுமுகம்.



"இதோ வரேன்ங்க" என்று வேகமாக எழுந்தவர், அறைக்குள் செல்ல மஞ்சள் கயிறுடன் தனக்கு பக்கவாட்டில் நின்று இருந்தான் விஜய்.



கோதைக்கு அடுத்த நாற்காலியில் தான் விஜயா அமர்ந்து இருந்ததால் தன்னுடைய தாயின் உடைய கயிறா என்று விசாரிக்க அவருக்கு பக்கத்தில் வந்து விஜய் நிற்க, அது கோதையின் பக்கவாட்டாகவும் இருந்தது.



"அது வந்து... என்னுடையது தான்" என்று தயங்கிக் கொண்டே கூறிய கோதை எழுந்தாள்.



"ஓ!" என்றவன், "சரி வாங்கிக்கோ" என்று சொல்ல,



"நான் ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்" என்று கூறி விட்டு வேகமாகச் சென்றவள், தன் கையை கழுவி விட்டு அவன் முன்னே வந்து நின்றாள்.



விஜய்யோ கோதையை பார்த்த வண்ணமாக மஞ்சள் கயிறை நீட்ட, அவளுமே அவனை பார்த்தபடியே கை நீட்ட, இருவரின் கைகளும் எதேர்ச்சையாக தொட்டு உரசிக் கொள்ள, கோதைக்கு அந்த உணர்வு புது விதமாய் இருந்தது.



விஜய்யின் மனதிலோ, 'இவள் போனை பார்த்து இருப்பாளா இல்லையா?' என்பது தான் ஓடிக் கொண்டு இருக்க, அவன் தற்செயலாய் தான் கோதையை கவனித்தான்.



'இவள் என்ன அந்த கயிறை பார்த்து சிரிச்சுட்டு இருக்காள்? ஒரு வேளை ஃபீவர் வந்து மெண்டல் ஆகிட்டாளா என்ன!' என்று நினைத்துக் கொண்டவன் பின் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
 
Status
Not open for further replies.
Top