பகுதி 33
மிரட்சியுடன் தன் கையில் வைத்திருந்த அலைபேசியின் பிளேஷ் லைட்டை ஒளிர செய்தான் ஆரியன்.
தலையில் ரத்தம் வழிந்த வண்ணம் மடிந்து கிடந்தார் அந்த ஹோட்டலின் முதலாளி.
திடீரென அதனை கண்டு பயம் அடைந்தவனின் உடலில் ஒருகணம் எந்த வித அசைவும் இல்லை.
பொழுது விடிய ஆரம்பித்தது, மணி அதிகாலை நான்கு என கடிகாரம் காட்டியது. அருகில் மாடுகளின் சத்தம் ஆரவாரமாக இருந்தது. அந்த சத்தத்தில் தன்னிலை அடைந்தவன் என்ன நினைத்தானோ விறுவிறுவென வெளியே வந்தான்.
வெளியே வந்தவன் யாரையும் கவனிக்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
அங்கு அவன் யாரையும் கவனிக்கவில்லை ஆனால் ரத்தம் தோய்ந்த சட்டையுடன் வெளியே சென்ற ஆரியனை கவனித்துக் கொண்டார் சற்று தூரத்தில் பால் கறந்து கொண்டிருந்த நபர் ஒருவர்.
"இது அய்யாகண்ணு பேரன் மாதிரி இருக்கே… சட்டையெல்லாம் ரத்ததோடு இந்நேரத்தில கடையில் இருந்து வெளியே வரான்?" என்றவர் ஒருவித சந்தேகத்துடன் உணவகத்தை நோக்கி வந்தார்.
உணவகம் இப்போதும் திறந்து தான் இருந்தது.
"முத்து லிங்கம்" என்று அழைத்தபடி உள்ளே வந்தான் அந்த பால் வியாபாரி. அந்த கடையின் முதலாளி பெயர் முத்து லிங்கம் தான்.
எப்போதும் நான்கு மணிக்கு முதலாவதாக வந்து கடையை திறந்து விடுவார் முத்து லிங்கம். இப்போதும் அவர் தான் கடையை திறந்து இருப்பார் என்ற எண்ணத்தில் இவர் உள்ளே வந்தார்.
ஆனால் அங்கு அவர் கண்ட காட்சியில் அதிர்ந்து போனவர்… அக்கம் பக்கத்தினரை கத்தி அழைத்தார்.
சிறிது நேரத்தில் போலீஸ் அவ்விடத்தில் கூடியது. இது எதுவும் தெரியாமல் சங்கவி வீடு நோக்கி வந்தான் ஆரியன்.
அங்கு சிதறி கிடந்த பொருள்களும் உடைந்து கிடந்த வளையல் துண்டுகளும் ஏனோ சங்கவியை தான் ஆரியனுக்கு ஞாபகப்படுத்தியது.
அங்கு என்ன நடந்திருக்கும், இதற்கும் அவளுக்கு ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? என்பதனை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பித்து பிடித்த மனநிலையில் அங்கு வந்து சேர்ந்தான்.
சட்டை முழுவதும் இருந்த ரத்தத்தை கூட அவன் கவனிக்கவில்லை! அப்படி ஒரு மனநிலையில் தன்னை மறந்து அங்கு வந்து நின்றான்.
அந்நொடி சங்கவியை அங்கிருந்து அழைத்து செல்ல காரினை எடுத்து கொண்டு வந்தான் மதிவாணன்.
மதிவாணன் காரில் அமர்ந்திருக்க... பின் இருக்கையில் தன் பாட்டியை அமரவைத்தாள் சங்கவி, அவரும் அமர்ந்த பிறகு முன் இருக்கை நோக்கி வந்த சங்கவி, எதிரில் சற்று தூரத்தில் வந்த ஆரியனை கண்டதும் அப்படியே நின்றாள்.
"வண்டியில ஏறு" என்று மதி சொல்லவும், அந்நொடி எப்போதும் போல ஆரியனின் விழிகளும் சங்கவியின் விழிகளும் மோதிக்கொண்டது.
மதியின் வாகனம் புறப்பட்டது... ஆரியன் உறைந்து போய் நின்றான். சட்டென அவனால் எந்த வித எதிர்வினையும் புரிய முடியவில்லை.
ஆரியனை கண்டதும் அவனிடம் ஓடி வந்தான் விவேக் "என்னடா இது சட்டையெல்லாம் ரத்தம்" என்று அவன் சொன்னதும் தான் ஆரியனுக்கு நினைவு வந்தது, உடனே குனிந்து தன் சட்டையை பார்த்தான் பின்னர் வெடுக்கென திரும்பி "சங்கவி" என்று அழைத்தான்.
அவன் அழைப்பு அவளின் செவிகளை அடைந்திருந்தது. மதியும் 'யார் அவன்?' என்று கண்ணாடி வழியே பார்த்தான்.
"யார் அது? வண்டியை நிறுத்தனுமா?" என்று சங்கவியிடம் கேட்டான் மதி. பின்னால் திரும்பி பார்த்தாள் சங்கவி. ஒரு நொடி மௌனம் அடுத்த கணமே "தேவையில்லை முதலில் இங்கேயிருந்து போயிடலாம்" என்று சொன்னவளின் கண்கள் அவளையும் மீறி கலங்கியிருந்தது. இது ஆரியன் மீது அவள் கொண்ட காதலுக்காகவா? அல்லது அவள் செய்த கொலையின் வெளிப்பாடு மனதை அழுத்தியதாலா என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
செல்லும் அவளை பின் தொடர சொல்லி ஆரியனின் மனம் உந்தியது உடனே அவனும் பின் தொடர எண்ணினான். ஆனால் அவன் நேரம் வாகணம் கூட சதி செய்தது.
வாகனத்தை அவனால் உரிய நேரத்தில் உயிர்ப்பிக்க முடியவில்லை. தடுமாறி நின்றான்.
"என்ன ஆச்சுடா? என்ன பண்ணி தொலைஞ்ச?" என்று விவேக் மீண்டும் மீண்டும் கேட்டான்.
சங்கவி இங்கிருந்து இந்நேரம் தப்பி ஓடியதை கொண்டே அவள் தான் அக்கொலை செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் ஆரியன்.
அவனது முடிவும் உண்மைதான். உணவகத்தில் வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த முதலாளியை கோவத்தில் பிடித்து தள்ளினாள் சங்கவி, அவரது தலையோ அங்கிருந்த கிரைண்டர் மீது மோத சரிந்து கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயம்! உடலில் இருந்து வெளியேறிய அதிகமான ரத்தத்தால் அவரது உயிர் அங்கேயே பிரிந்தது.
அடுத்து என்ன செய்வது என்று ஆரியனுக்கு புரியவில்லை... விவேக்கை அழைத்து கொண்டு வீட்டில் விட்டவன் நேராக தங்கள் தோட்டத்து வீட்டிற்கு சென்றான். அங்கு தன் சட்டையை கழட்டி போட்டவன் அந்நேரத்தில் கினத்தடியில் குளித்து விட்டு கட்டிலில் கண் மூடி படுத்துக் கொண்டான்.
நடந்த நிகழ்வுகளை அன்றே அவன் தாத்தாவிடமோ அல்லது விவேக்கிடமோ கூறி இருந்தால் இப்படி ஒரு நிலை ஆரியனுக்கு வந்திருக்காது. யாரிடமும் எதையும் கூற விரும்பாதவன் தன்னக்குள் துன்பத்தை தாங்கி உறைந்து போனான்.
வீட்டுக்கு வந்த விவேக்கிற்கு நெஞ்சமெல்லாம் படபடவென்று இருந்தது.
ஆரியன் என்ன செய்து தொலைத்தானோ என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது.
இரவு வெளியே சென்ற தன் பேரன் காலை 6 மணியாகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்றதும் அவனைத் தேடி வெளியே வந்தார் அய்யாகண்ணு.
அந்நேரம் அவர்கள் வீட்டு வாசலில் போலீஸ் சீப் வந்து நின்றது.
போலீசாரை கண்டதும் என்ன? ஏது? என்று இவர் விசாரிக்க, அவர்களது முதல் கேள்வியே "ஆரியன் உங்க பேரனா? இப்ப அவன் எங்க இருக்கான்? வர சொல்லுங்க" என்பதுதான்.
திடீரென தனது பேரனை தேடி காவலர்கள் வந்திருக்கிறார்கள் என்றதும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார் அய்யாகண்ணு.
எதற்காக? ஏன்? என்று போலீசாரிடம் அவர் காரணம் கேட்க...
"கார்த்திகேயன் ஹோட்டல் முதலாளிய கொலை பண்ணிட்டாங்க, ஸ்பாட்ல உங்க பேரனை பார்த்ததா ஒருத்தர் சாட்சி சொல்லி இருக்காரு... அதை பத்தி விசாரிக்கலாம்னு தான் வந்தேன்"
"யார் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா? என் பேரன் அப்படிப்பட்டவன் இல்ல" ஊருக்குள் மதிக்கத்தக்க இடத்தில் இவர் இருப்பதால் போலீசாரும் சற்று மரியாதை கொடுத்து தான் பேசினார்கள்.
"அவன் எப்படிபட்டவன்னு விசாரிச்சா தானே தெரியும்" என்றார் காவலர்.
"அவன் சின்ன பையன், கொலை அது இதுன்னு பெரிய பெரிய விசயமெல்லாம் பேசுறீங்க?"
"ப்ச்" அய்யாகண்ணுவின் பிதற்றலில் சலித்துக் கொண்ட காவலர் "உள்ளே போயி தேடுங்க" என்று சக காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
'என்ன நடக்கிறது?' என்று புரியாமல் அய்யாகன்னு அப்படியே உடைந்துபோய் நாற்காலியில் அமர்ந்தார்.
அந்நேரம் அவர்களது தோட்டத்தில் வேலை செய்யும் வேலையாள் ஒருவர் வந்தார் "அய்யா நம்ம ஆரி தம்பி உங்க கிட்ட ஏதோ பேசுனுமாம்... நம்ம தோட்டத்து வீட்டுல தான் இருக்காரு, உங்களை வர சொன்னாரு" என்று இடம் பொருள் அறியாமல் சகஜமாக அவர் சத்தமிட்டு கூறிவிட, அது அங்கிருந்த காவலர்களுக்கும் கேட்டு விட்டது.
தன் பேரனுக்கு இவர்களால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பரிதவித்து போனார் அந்த பெரியவர்.
காவலரோ நேராக அந்த வேலையாளிடம் வந்தார். "எங்க வந்து இடத்தை காட்டு" என்று சொல்ல... அந்த நபரோ அய்யாகண்ணுவை பார்த்தார். "அங்க என்ன பார்வை வா" என்று இழுத்து கொண்டு காவலர்கள் செல்ல, அவர்களது வாகனத்தை தொடர்ந்து அய்யாகண்ணுவின் வாகனமும் இவரது தோட்டம் நோக்கி சென்றது.
இது எதுவும் தெரியாமல் பலத்தை யோசனையில் கண்ணுக்கு குறுக்காக கையை மடக்கிக் கொண்டு கால் நீட்டி கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான் ஆரியன்.
அவனது தோரணை ஏதோ ஒருவிஷயத்தை முடிவு செய்துவிட்டு தான் இப்படி சாதாரணமாக இருக்கிறான் என்பதை அய்யாகண்ணுவிற்கு உணர்த்தியது.
காவலர்கள் நேராக உள்ளே வந்து விசாரிக்க... அவர்களை தடுத்து மறைத்தவாறு தன் பேரனை பின் நிறுத்தி முன் நின்றார் அய்யாகண்ணு.
"அய்யா விலகி நில்லுங்க" என்ற காவலர் "எதுக்கு அந்த ஹோட்டல் முதலாளியை கொன்ன" என்று ஆரியனிடம் கேட்டார்.
"நான் எதுவும் பண்ணல" என்று ஆரியன் சொல்வான் என்று அய்யாகண்ணு எதிர்பார்க்க... எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் ஆரியன்.
அவனது அந்த அமைதி அய்யாகண்ணுவிற்கு பயத்தை கொடுத்தது.
இவனது அந்த அமைதி போதுமே அவர்கள் இவனை கைது செய்ய... கைது செய்து அழைத்து சென்றனர்.
"எதுக்காக கொலை பண்ண" என்ற அவர்களது கேள்விக்கு ஆரியனிடம் பதில் இல்லை.
வெகு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தான். அப்போது அவனுக்கு எதிராக இருக்கையை எடுத்து போட சொல்லி அமர்ந்தார் ஒரு காவலர், அவன் கார்த்திகேயன்.
இறந்த முதலாளி முத்துலிங்கத்தின் அண்ணன் மகன்.
தன் சித்தப்பாவின் குணநலனை ஒரு அளவுக்கு அறிந்து வைத்திருந்தான் கார்த்திகேயன்... சங்கவி காணாமல் போனது, மேலும் அவள் சார்ந்த சில பொருட்கள் சம்பவ இடத்தில் சிதறி கிடந்தது, அது மட்டும் அல்லாமல் ஆரியன் அவள் செல்லும் இடமெல்லாம் வெறித்து வெறித்து அவளை பார்த்து கொண்டிருந்தது இதை எல்லாம் அடிப்படையாக வைத்து இது தான் நடந்திருக்க வேண்டும் என்று யூகத்தின் அடிப்படையில் ஒரு கதையை சொன்னான் கார்த்திகேயன்.
"சங்கவி யாரு?" என்று கேட்டதும் முதல் முறை அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் ஆரியன்.
"ம்ம்ம்... உனக்கும் அந்த பொண்ணுக்கும் காதல் சரி தானே?" என்று கேட்டதும் மீண்டும் தலையை குனிந்து கொண்டான் ஆரியன்.
"எனக்கு என் சித்தப்பா பத்தி நல்லாவே தெரியும் அப்புறம் அங்க வேலை பார்த்த ஆளுங்ககிட்டயும் விசாரிச்சேன். சோ நேத்து நயிட் அங்க ஏதோ தப்பா நடந்து இருக்கு... நீ போயி ஹீரோயிசம் காட்டியிருக்க! அடுத்து அந்த பொண்ணு இதுக்கு மேல இங்க இருந்தா போலீஸ் கேஸ் அது இதுன்னு அவள் மானம் போயிடும்னு யாருக்கும் தெரியாமல் அவளை இங்கேயிருந்து அனுப்பி வச்சு இருக்க? நான் சொல்லுறது எல்லாம் சரி தானே?" என்றவர் லத்தியை எடுத்து ஆரியனின் முகத்தை நிமிர்த்தினார்.
இவனோ அவரது கேள்விக்கு 'ஆம்' என்றும் சொல்லவில்லை 'இல்லை' என்றும் மறுக்கவில்லை.
"இப்போ அந்த பொண்ணு எங்க? அவளை எங்க மறைச்சு வச்சுயிருக்க? இப்போ நீ சொல்லலனாலும் கண்டிப்பா நாங்க அவளை தேடி கண்டு பிடிச்சிடுவோம்" என்றதும் ஆரியன் சற்று பயம் கொள்ள ஆரம்பித்தான்.
இப்போது ஆரியன் நினைத்தால் கூட இந்த வழக்கில் இருந்து சுலபமாக வெளியே வந்து விடலாம் இவன் 'இல்லை' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் இவர்களுக்கு இருக்கும் பண பலத்தை கொண்டு இந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடலாம்... ஆனால் அடுத்து என்னவாகும்? 'சங்கவியை தேடி பிடித்து விசாரிப்பார்கள் அதன் பிறகு சங்கவி இதில் மாட்டிக் கொள்வாளே' என்று எண்ணி அஞ்சினான்,
இந்த வழக்கில் சங்கவி தண்டனை அனுபவிக்க கூடாது என்று ஆரியன் விரும்பினான்.
அந்த நொடி யாரும் எடுக்கத் தயங்கும் ஒரு முடிவை துணிந்து எடுத்தான் ஆரியன் அவன் எடுத்த அந்த ஒரு முடிவு தான் இன்று அவன் அனைத்தையும் இழந்து நிற்பதற்கு ஆரம்பப் புள்ளியானது.
நிச்சயம் இந்த கொலையை சங்கவி தான் செய்திருப்பாள் என்று தீர்க்கமாக முடிவு செய்திருந்தான் ஆரியன். தான் இதில் நிரபராதி என்று நிரூபணம் ஆனால் அடுத்து இவர்களின் குறிக்கோள் சங்கவியை தேடி கண்டுபிடிப்பது தான் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட ஆரியன் அவளைக் காப்பாற்ற எண்ணி தானே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டான்.
அப்போது அவனுக்கு வெறும் 19 வயது தான் எதையும் தீர யோசித்து முடிவெடுக்கும் பக்குவத்தில் அவன் அப்போது இல்லை.
அவளை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்ததனால் என்ன செய்கிறோம்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? என்று யோசிக்காமல் அதற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இக்கொலையை நான் தான் செய்தேன் என்று தண்டனையை ஏற்க முன்வந்து வாக்குமூலம் கொடுத்தான்.
ஆரியன் சங்கவியை விரும்பியதாகவும் ஆனால் சங்கவி அவன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து தன் முதலாளியிடம் ஆர்யனை பற்றி தெரிவித்து கண்டிக்கச் சொல்லியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கோபத்தில் ஆரியன் அவரை பிடித்து தள்ளி விட்டதாகவும் அதில் அடிப்பட்ட வேகத்தில் ரத்தம் வெளியேறி முதலாளி இறந்ததாகவும் வழக்கு முடிக்கப்பட்டிருந்தது.
ஆரியனின் எண்ணம் சங்கவியை காப்பாற்றுவது தான் என்பதை நன்கு உணர்ந்த கார்த்திகேயன், ஆரியனது முதிர்ச்சி இல்லாத அர்த்தமற்ற செயலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான்.
அந்த முதலாளியின் மீது எந்த தவறும் இல்லை என்று வழக்கு எழுதப்பட்டால் மட்டுமே சங்கவி இதிலிருந்து முழுவதுமாக வெளியே வர முடுயும் என்று ஆரியனின் மனதில் இவன் விதைத்திருக்க, அவனும் அதனை உணர்ந்து அவர்கள் போக்கிற்கே அந்த வழக்கை மாற்றியிருந்தான்.
தன் சித்தப்பாவை கொன்றவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கார்த்திகேயனுக்கு சிறிதும் இல்லை, தனது சித்தப்பா தவறானவர் என்று அவனுக்கும் ஆரம்பத்திலேயே தெரியும். ஆனாலும் என்ன செய்வது சொந்தத்திற்குள் ஒருவன் குற்றவாளி என்றாலும் அவன் மீது குற்றம் சாட்ட இயலாது அல்லவா? அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் இருந்தான் கார்த்திகேயன் தனது சித்தப்பாவிற்காக அவன் இந்த வழக்கை மாற்றவில்லை அவரை நல்லவராக காட்ட வேண்டும் என்றும் அவன் நினைக்கவில்லை... மாறாக இவரால் தன் குடும்ப கௌரவத்திற்கு எந்த வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற சுயநலத்தில் ஆரியனின் அவ்வயது அறியாமையினை பயன்படுத்தி இந்த வழக்கை மாற்றி அமைத்தான் கார்த்திகேயன்.
குற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டதனால் ஆரியனுக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆரியன் அமைதியாக தண்டனையை ஏற்றுக் கொள்ள முன் வந்ததால் நீலகண்டன் குடும்பத்தினராலும் இவனை வெளியே கொண்டு வர முடியவில்லை.
நாட்கள் சென்றது சிறை வாழ்க்கையை ஆரியனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.. ஒரு நாள் அமைதியாக கழிந்தது, இரண்டாவது நாள் மிக மோசமானதாக இருந்தது மூன்றாவது நாள் தன்னால் இங்கு இருக்கவே முடியாது என்ற மனநிலைக்கு வந்தான். தனிமையில் அழ ஆரம்பித்தான் அந்த சுற்றுப்புறம் அவனை கொஞ்சம் கொஞ்சமாக உயிரோடு கொள்ள ஆரம்பித்தது.
அப்போது அங்கு அவனைப் பார்ப்பதற்காக அய்யாகண்ணுவுடன் சேர்ந்து விவேக்கும் வந்திருந்தான்.
ஐயாக்கண்ணுவினால் தன் பேரனை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை கண்ணீர் வடிக்க அவனைப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே வெளியேறினார்.
விவேக்கிற்கு பெரும் வருத்தம் அதைவிட இவன் மீத அதீத கோபம். இருந்தும் நிச்சயமாக ஆரியன் அப்படி ஒரு தவறை செய்திருக்க மாட்டான் என்று விவேக் நம்பினான்.
"ஏன்டா இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ண?" என்று கேட்டான்.
இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆரியனின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வெளியேற தொடங்கியது. 'தெரியலடா அந்த நேரம் அது சரின்னு பட்டுச்சு அவளை எப்படியாவது இதிலயிருந்து காப்பாத்திடனும்னு மட்டும் தான் தோணுச்சு. ஆனா எனக்கு இங்க இருக்க பிடிக்கலடா" என்று முதல் முறை குழந்தை போல அழும் தன் நண்பனை கண்டு விவேக்கின் கண்களும் கலங்கியது ஆனால் இனி என்ன செய்ய இயலும் அதுதான் எல்லாமே முடிந்து விட்டது. இவனே சுயநினைவுடன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் இனி எப்படி இதனை மாற்றி அமைப்பது என்று புரியாமல் விவேக்கும் தடுமாறி நின்றான்.
கண்களை துடைத்துக்கொண்ட ஆரியன் "எனக்கே இந்த ஜெயில் வாழ்க்கை இவ்ளோ கஷ்டமா இருக்குன்னா, பாவம் சங்கவியால எப்படி இதை தாங்கி இருக்க முடியும்? அவளுக்காக தானே இந்த குற்றத்தை ஏத்துகிட்டேன் அது ஒரு விதத்தில் நிம்மதி தான்" இப்போதும் அவளை பற்றியே யோசிக்கும் தன் நண்பன் மீது கோவம் வந்தது.
"அப்புறம் என்னை பார்க்க அப்பாவும், அம்மாவும் ஏன் வரலை?" என்று கேட்டான்.
"இப்போதான் அவங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுறாங்களா? கண்டவளுக்காக பழியை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்கு போகும் போது அவங்க உன் கண்ணுக்கு தெரியலயா?"
"நீயும் என்னை திட்டி காயப்படுத்தாதடா விவேக். அவங்க ஏன் வரலன்னு சொல்லு"
"எனக்கு சரியா தெரியலடா ஆரி, ஆனால் அங்க ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க"
"என்ன பிரச்சனை?"
"அம்மாவையும் கயல்விழியையும் காணோம், உன் அப்பாவுக்கு பக்கவாதம் வந்திடுச்சு" என்று விவேக் சொல்ல சித்த பிரம்மை பிடித்தது போல உறைந்து நின்றான் ஆரியன்.
அதற்குள் விசிட்டிங் டைம் முடிய விவேக் அங்கிருந்து சென்றான்.
சிறைக்கு வந்த ஆரியனுக்கு இருப்புக் கொள்ளவில்லை தன் குடும்பத்தை பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அய்யாகண்ணு மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் ஆரியனுக்கு தெரிய வந்தது. விவேக்கின் தந்தை மூலம் போலீசிடம் பேசி இறுதிச் சடங்கிற்காக ஆரியனை வெளியை அழைத்து வர செய்தனர்.
தாத்தாவின் உடல் தகனத்திற்கு வைக்கப்பட்டிருக்க... அங்கு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் நீலகண்டன்.
விலங்கு பூட்டப்பட்டிருந்த கரத்துடன் தன் தந்தையை நோக்கிச் சென்றான் ஆரியன்.. மகனிடம் எதையோ சொல்ல எண்ணி பரிதவித்து கையசைக்க முற்பட்டார் ஆனால் முடியவில்லை. இதனை எல்லாம் கண்களில் வன்மத்தோடு நீலகண்டனின் சர்க்கர நாற்காலியைப் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் வேதாச்சலம் இந்திராவின் கணவன் யசோதாவின் தந்தை.
மிரட்சியுடன் தன் கையில் வைத்திருந்த அலைபேசியின் பிளேஷ் லைட்டை ஒளிர செய்தான் ஆரியன்.
தலையில் ரத்தம் வழிந்த வண்ணம் மடிந்து கிடந்தார் அந்த ஹோட்டலின் முதலாளி.
திடீரென அதனை கண்டு பயம் அடைந்தவனின் உடலில் ஒருகணம் எந்த வித அசைவும் இல்லை.
பொழுது விடிய ஆரம்பித்தது, மணி அதிகாலை நான்கு என கடிகாரம் காட்டியது. அருகில் மாடுகளின் சத்தம் ஆரவாரமாக இருந்தது. அந்த சத்தத்தில் தன்னிலை அடைந்தவன் என்ன நினைத்தானோ விறுவிறுவென வெளியே வந்தான்.
வெளியே வந்தவன் யாரையும் கவனிக்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
அங்கு அவன் யாரையும் கவனிக்கவில்லை ஆனால் ரத்தம் தோய்ந்த சட்டையுடன் வெளியே சென்ற ஆரியனை கவனித்துக் கொண்டார் சற்று தூரத்தில் பால் கறந்து கொண்டிருந்த நபர் ஒருவர்.
"இது அய்யாகண்ணு பேரன் மாதிரி இருக்கே… சட்டையெல்லாம் ரத்ததோடு இந்நேரத்தில கடையில் இருந்து வெளியே வரான்?" என்றவர் ஒருவித சந்தேகத்துடன் உணவகத்தை நோக்கி வந்தார்.
உணவகம் இப்போதும் திறந்து தான் இருந்தது.
"முத்து லிங்கம்" என்று அழைத்தபடி உள்ளே வந்தான் அந்த பால் வியாபாரி. அந்த கடையின் முதலாளி பெயர் முத்து லிங்கம் தான்.
எப்போதும் நான்கு மணிக்கு முதலாவதாக வந்து கடையை திறந்து விடுவார் முத்து லிங்கம். இப்போதும் அவர் தான் கடையை திறந்து இருப்பார் என்ற எண்ணத்தில் இவர் உள்ளே வந்தார்.
ஆனால் அங்கு அவர் கண்ட காட்சியில் அதிர்ந்து போனவர்… அக்கம் பக்கத்தினரை கத்தி அழைத்தார்.
சிறிது நேரத்தில் போலீஸ் அவ்விடத்தில் கூடியது. இது எதுவும் தெரியாமல் சங்கவி வீடு நோக்கி வந்தான் ஆரியன்.
அங்கு சிதறி கிடந்த பொருள்களும் உடைந்து கிடந்த வளையல் துண்டுகளும் ஏனோ சங்கவியை தான் ஆரியனுக்கு ஞாபகப்படுத்தியது.
அங்கு என்ன நடந்திருக்கும், இதற்கும் அவளுக்கு ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? என்பதனை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பித்து பிடித்த மனநிலையில் அங்கு வந்து சேர்ந்தான்.
சட்டை முழுவதும் இருந்த ரத்தத்தை கூட அவன் கவனிக்கவில்லை! அப்படி ஒரு மனநிலையில் தன்னை மறந்து அங்கு வந்து நின்றான்.
அந்நொடி சங்கவியை அங்கிருந்து அழைத்து செல்ல காரினை எடுத்து கொண்டு வந்தான் மதிவாணன்.
மதிவாணன் காரில் அமர்ந்திருக்க... பின் இருக்கையில் தன் பாட்டியை அமரவைத்தாள் சங்கவி, அவரும் அமர்ந்த பிறகு முன் இருக்கை நோக்கி வந்த சங்கவி, எதிரில் சற்று தூரத்தில் வந்த ஆரியனை கண்டதும் அப்படியே நின்றாள்.
"வண்டியில ஏறு" என்று மதி சொல்லவும், அந்நொடி எப்போதும் போல ஆரியனின் விழிகளும் சங்கவியின் விழிகளும் மோதிக்கொண்டது.
மதியின் வாகனம் புறப்பட்டது... ஆரியன் உறைந்து போய் நின்றான். சட்டென அவனால் எந்த வித எதிர்வினையும் புரிய முடியவில்லை.
ஆரியனை கண்டதும் அவனிடம் ஓடி வந்தான் விவேக் "என்னடா இது சட்டையெல்லாம் ரத்தம்" என்று அவன் சொன்னதும் தான் ஆரியனுக்கு நினைவு வந்தது, உடனே குனிந்து தன் சட்டையை பார்த்தான் பின்னர் வெடுக்கென திரும்பி "சங்கவி" என்று அழைத்தான்.
அவன் அழைப்பு அவளின் செவிகளை அடைந்திருந்தது. மதியும் 'யார் அவன்?' என்று கண்ணாடி வழியே பார்த்தான்.
"யார் அது? வண்டியை நிறுத்தனுமா?" என்று சங்கவியிடம் கேட்டான் மதி. பின்னால் திரும்பி பார்த்தாள் சங்கவி. ஒரு நொடி மௌனம் அடுத்த கணமே "தேவையில்லை முதலில் இங்கேயிருந்து போயிடலாம்" என்று சொன்னவளின் கண்கள் அவளையும் மீறி கலங்கியிருந்தது. இது ஆரியன் மீது அவள் கொண்ட காதலுக்காகவா? அல்லது அவள் செய்த கொலையின் வெளிப்பாடு மனதை அழுத்தியதாலா என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
செல்லும் அவளை பின் தொடர சொல்லி ஆரியனின் மனம் உந்தியது உடனே அவனும் பின் தொடர எண்ணினான். ஆனால் அவன் நேரம் வாகணம் கூட சதி செய்தது.
வாகனத்தை அவனால் உரிய நேரத்தில் உயிர்ப்பிக்க முடியவில்லை. தடுமாறி நின்றான்.
"என்ன ஆச்சுடா? என்ன பண்ணி தொலைஞ்ச?" என்று விவேக் மீண்டும் மீண்டும் கேட்டான்.
சங்கவி இங்கிருந்து இந்நேரம் தப்பி ஓடியதை கொண்டே அவள் தான் அக்கொலை செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் ஆரியன்.
அவனது முடிவும் உண்மைதான். உணவகத்தில் வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த முதலாளியை கோவத்தில் பிடித்து தள்ளினாள் சங்கவி, அவரது தலையோ அங்கிருந்த கிரைண்டர் மீது மோத சரிந்து கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயம்! உடலில் இருந்து வெளியேறிய அதிகமான ரத்தத்தால் அவரது உயிர் அங்கேயே பிரிந்தது.
அடுத்து என்ன செய்வது என்று ஆரியனுக்கு புரியவில்லை... விவேக்கை அழைத்து கொண்டு வீட்டில் விட்டவன் நேராக தங்கள் தோட்டத்து வீட்டிற்கு சென்றான். அங்கு தன் சட்டையை கழட்டி போட்டவன் அந்நேரத்தில் கினத்தடியில் குளித்து விட்டு கட்டிலில் கண் மூடி படுத்துக் கொண்டான்.
நடந்த நிகழ்வுகளை அன்றே அவன் தாத்தாவிடமோ அல்லது விவேக்கிடமோ கூறி இருந்தால் இப்படி ஒரு நிலை ஆரியனுக்கு வந்திருக்காது. யாரிடமும் எதையும் கூற விரும்பாதவன் தன்னக்குள் துன்பத்தை தாங்கி உறைந்து போனான்.
வீட்டுக்கு வந்த விவேக்கிற்கு நெஞ்சமெல்லாம் படபடவென்று இருந்தது.
ஆரியன் என்ன செய்து தொலைத்தானோ என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது.
இரவு வெளியே சென்ற தன் பேரன் காலை 6 மணியாகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்றதும் அவனைத் தேடி வெளியே வந்தார் அய்யாகண்ணு.
அந்நேரம் அவர்கள் வீட்டு வாசலில் போலீஸ் சீப் வந்து நின்றது.
போலீசாரை கண்டதும் என்ன? ஏது? என்று இவர் விசாரிக்க, அவர்களது முதல் கேள்வியே "ஆரியன் உங்க பேரனா? இப்ப அவன் எங்க இருக்கான்? வர சொல்லுங்க" என்பதுதான்.
திடீரென தனது பேரனை தேடி காவலர்கள் வந்திருக்கிறார்கள் என்றதும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார் அய்யாகண்ணு.
எதற்காக? ஏன்? என்று போலீசாரிடம் அவர் காரணம் கேட்க...
"கார்த்திகேயன் ஹோட்டல் முதலாளிய கொலை பண்ணிட்டாங்க, ஸ்பாட்ல உங்க பேரனை பார்த்ததா ஒருத்தர் சாட்சி சொல்லி இருக்காரு... அதை பத்தி விசாரிக்கலாம்னு தான் வந்தேன்"
"யார் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா? என் பேரன் அப்படிப்பட்டவன் இல்ல" ஊருக்குள் மதிக்கத்தக்க இடத்தில் இவர் இருப்பதால் போலீசாரும் சற்று மரியாதை கொடுத்து தான் பேசினார்கள்.
"அவன் எப்படிபட்டவன்னு விசாரிச்சா தானே தெரியும்" என்றார் காவலர்.
"அவன் சின்ன பையன், கொலை அது இதுன்னு பெரிய பெரிய விசயமெல்லாம் பேசுறீங்க?"
"ப்ச்" அய்யாகண்ணுவின் பிதற்றலில் சலித்துக் கொண்ட காவலர் "உள்ளே போயி தேடுங்க" என்று சக காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
'என்ன நடக்கிறது?' என்று புரியாமல் அய்யாகன்னு அப்படியே உடைந்துபோய் நாற்காலியில் அமர்ந்தார்.
அந்நேரம் அவர்களது தோட்டத்தில் வேலை செய்யும் வேலையாள் ஒருவர் வந்தார் "அய்யா நம்ம ஆரி தம்பி உங்க கிட்ட ஏதோ பேசுனுமாம்... நம்ம தோட்டத்து வீட்டுல தான் இருக்காரு, உங்களை வர சொன்னாரு" என்று இடம் பொருள் அறியாமல் சகஜமாக அவர் சத்தமிட்டு கூறிவிட, அது அங்கிருந்த காவலர்களுக்கும் கேட்டு விட்டது.
தன் பேரனுக்கு இவர்களால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பரிதவித்து போனார் அந்த பெரியவர்.
காவலரோ நேராக அந்த வேலையாளிடம் வந்தார். "எங்க வந்து இடத்தை காட்டு" என்று சொல்ல... அந்த நபரோ அய்யாகண்ணுவை பார்த்தார். "அங்க என்ன பார்வை வா" என்று இழுத்து கொண்டு காவலர்கள் செல்ல, அவர்களது வாகனத்தை தொடர்ந்து அய்யாகண்ணுவின் வாகனமும் இவரது தோட்டம் நோக்கி சென்றது.
இது எதுவும் தெரியாமல் பலத்தை யோசனையில் கண்ணுக்கு குறுக்காக கையை மடக்கிக் கொண்டு கால் நீட்டி கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான் ஆரியன்.
அவனது தோரணை ஏதோ ஒருவிஷயத்தை முடிவு செய்துவிட்டு தான் இப்படி சாதாரணமாக இருக்கிறான் என்பதை அய்யாகண்ணுவிற்கு உணர்த்தியது.
காவலர்கள் நேராக உள்ளே வந்து விசாரிக்க... அவர்களை தடுத்து மறைத்தவாறு தன் பேரனை பின் நிறுத்தி முன் நின்றார் அய்யாகண்ணு.
"அய்யா விலகி நில்லுங்க" என்ற காவலர் "எதுக்கு அந்த ஹோட்டல் முதலாளியை கொன்ன" என்று ஆரியனிடம் கேட்டார்.
"நான் எதுவும் பண்ணல" என்று ஆரியன் சொல்வான் என்று அய்யாகண்ணு எதிர்பார்க்க... எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் ஆரியன்.
அவனது அந்த அமைதி அய்யாகண்ணுவிற்கு பயத்தை கொடுத்தது.
இவனது அந்த அமைதி போதுமே அவர்கள் இவனை கைது செய்ய... கைது செய்து அழைத்து சென்றனர்.
"எதுக்காக கொலை பண்ண" என்ற அவர்களது கேள்விக்கு ஆரியனிடம் பதில் இல்லை.
வெகு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தான். அப்போது அவனுக்கு எதிராக இருக்கையை எடுத்து போட சொல்லி அமர்ந்தார் ஒரு காவலர், அவன் கார்த்திகேயன்.
இறந்த முதலாளி முத்துலிங்கத்தின் அண்ணன் மகன்.
தன் சித்தப்பாவின் குணநலனை ஒரு அளவுக்கு அறிந்து வைத்திருந்தான் கார்த்திகேயன்... சங்கவி காணாமல் போனது, மேலும் அவள் சார்ந்த சில பொருட்கள் சம்பவ இடத்தில் சிதறி கிடந்தது, அது மட்டும் அல்லாமல் ஆரியன் அவள் செல்லும் இடமெல்லாம் வெறித்து வெறித்து அவளை பார்த்து கொண்டிருந்தது இதை எல்லாம் அடிப்படையாக வைத்து இது தான் நடந்திருக்க வேண்டும் என்று யூகத்தின் அடிப்படையில் ஒரு கதையை சொன்னான் கார்த்திகேயன்.
"சங்கவி யாரு?" என்று கேட்டதும் முதல் முறை அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் ஆரியன்.
"ம்ம்ம்... உனக்கும் அந்த பொண்ணுக்கும் காதல் சரி தானே?" என்று கேட்டதும் மீண்டும் தலையை குனிந்து கொண்டான் ஆரியன்.
"எனக்கு என் சித்தப்பா பத்தி நல்லாவே தெரியும் அப்புறம் அங்க வேலை பார்த்த ஆளுங்ககிட்டயும் விசாரிச்சேன். சோ நேத்து நயிட் அங்க ஏதோ தப்பா நடந்து இருக்கு... நீ போயி ஹீரோயிசம் காட்டியிருக்க! அடுத்து அந்த பொண்ணு இதுக்கு மேல இங்க இருந்தா போலீஸ் கேஸ் அது இதுன்னு அவள் மானம் போயிடும்னு யாருக்கும் தெரியாமல் அவளை இங்கேயிருந்து அனுப்பி வச்சு இருக்க? நான் சொல்லுறது எல்லாம் சரி தானே?" என்றவர் லத்தியை எடுத்து ஆரியனின் முகத்தை நிமிர்த்தினார்.
இவனோ அவரது கேள்விக்கு 'ஆம்' என்றும் சொல்லவில்லை 'இல்லை' என்றும் மறுக்கவில்லை.
"இப்போ அந்த பொண்ணு எங்க? அவளை எங்க மறைச்சு வச்சுயிருக்க? இப்போ நீ சொல்லலனாலும் கண்டிப்பா நாங்க அவளை தேடி கண்டு பிடிச்சிடுவோம்" என்றதும் ஆரியன் சற்று பயம் கொள்ள ஆரம்பித்தான்.
இப்போது ஆரியன் நினைத்தால் கூட இந்த வழக்கில் இருந்து சுலபமாக வெளியே வந்து விடலாம் இவன் 'இல்லை' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் இவர்களுக்கு இருக்கும் பண பலத்தை கொண்டு இந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடலாம்... ஆனால் அடுத்து என்னவாகும்? 'சங்கவியை தேடி பிடித்து விசாரிப்பார்கள் அதன் பிறகு சங்கவி இதில் மாட்டிக் கொள்வாளே' என்று எண்ணி அஞ்சினான்,
இந்த வழக்கில் சங்கவி தண்டனை அனுபவிக்க கூடாது என்று ஆரியன் விரும்பினான்.
அந்த நொடி யாரும் எடுக்கத் தயங்கும் ஒரு முடிவை துணிந்து எடுத்தான் ஆரியன் அவன் எடுத்த அந்த ஒரு முடிவு தான் இன்று அவன் அனைத்தையும் இழந்து நிற்பதற்கு ஆரம்பப் புள்ளியானது.
நிச்சயம் இந்த கொலையை சங்கவி தான் செய்திருப்பாள் என்று தீர்க்கமாக முடிவு செய்திருந்தான் ஆரியன். தான் இதில் நிரபராதி என்று நிரூபணம் ஆனால் அடுத்து இவர்களின் குறிக்கோள் சங்கவியை தேடி கண்டுபிடிப்பது தான் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட ஆரியன் அவளைக் காப்பாற்ற எண்ணி தானே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டான்.
அப்போது அவனுக்கு வெறும் 19 வயது தான் எதையும் தீர யோசித்து முடிவெடுக்கும் பக்குவத்தில் அவன் அப்போது இல்லை.
அவளை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்ததனால் என்ன செய்கிறோம்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? என்று யோசிக்காமல் அதற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இக்கொலையை நான் தான் செய்தேன் என்று தண்டனையை ஏற்க முன்வந்து வாக்குமூலம் கொடுத்தான்.
ஆரியன் சங்கவியை விரும்பியதாகவும் ஆனால் சங்கவி அவன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து தன் முதலாளியிடம் ஆர்யனை பற்றி தெரிவித்து கண்டிக்கச் சொல்லியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கோபத்தில் ஆரியன் அவரை பிடித்து தள்ளி விட்டதாகவும் அதில் அடிப்பட்ட வேகத்தில் ரத்தம் வெளியேறி முதலாளி இறந்ததாகவும் வழக்கு முடிக்கப்பட்டிருந்தது.
ஆரியனின் எண்ணம் சங்கவியை காப்பாற்றுவது தான் என்பதை நன்கு உணர்ந்த கார்த்திகேயன், ஆரியனது முதிர்ச்சி இல்லாத அர்த்தமற்ற செயலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான்.
அந்த முதலாளியின் மீது எந்த தவறும் இல்லை என்று வழக்கு எழுதப்பட்டால் மட்டுமே சங்கவி இதிலிருந்து முழுவதுமாக வெளியே வர முடுயும் என்று ஆரியனின் மனதில் இவன் விதைத்திருக்க, அவனும் அதனை உணர்ந்து அவர்கள் போக்கிற்கே அந்த வழக்கை மாற்றியிருந்தான்.
தன் சித்தப்பாவை கொன்றவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கார்த்திகேயனுக்கு சிறிதும் இல்லை, தனது சித்தப்பா தவறானவர் என்று அவனுக்கும் ஆரம்பத்திலேயே தெரியும். ஆனாலும் என்ன செய்வது சொந்தத்திற்குள் ஒருவன் குற்றவாளி என்றாலும் அவன் மீது குற்றம் சாட்ட இயலாது அல்லவா? அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் இருந்தான் கார்த்திகேயன் தனது சித்தப்பாவிற்காக அவன் இந்த வழக்கை மாற்றவில்லை அவரை நல்லவராக காட்ட வேண்டும் என்றும் அவன் நினைக்கவில்லை... மாறாக இவரால் தன் குடும்ப கௌரவத்திற்கு எந்த வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற சுயநலத்தில் ஆரியனின் அவ்வயது அறியாமையினை பயன்படுத்தி இந்த வழக்கை மாற்றி அமைத்தான் கார்த்திகேயன்.
குற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டதனால் ஆரியனுக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆரியன் அமைதியாக தண்டனையை ஏற்றுக் கொள்ள முன் வந்ததால் நீலகண்டன் குடும்பத்தினராலும் இவனை வெளியே கொண்டு வர முடியவில்லை.
நாட்கள் சென்றது சிறை வாழ்க்கையை ஆரியனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.. ஒரு நாள் அமைதியாக கழிந்தது, இரண்டாவது நாள் மிக மோசமானதாக இருந்தது மூன்றாவது நாள் தன்னால் இங்கு இருக்கவே முடியாது என்ற மனநிலைக்கு வந்தான். தனிமையில் அழ ஆரம்பித்தான் அந்த சுற்றுப்புறம் அவனை கொஞ்சம் கொஞ்சமாக உயிரோடு கொள்ள ஆரம்பித்தது.
அப்போது அங்கு அவனைப் பார்ப்பதற்காக அய்யாகண்ணுவுடன் சேர்ந்து விவேக்கும் வந்திருந்தான்.
ஐயாக்கண்ணுவினால் தன் பேரனை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை கண்ணீர் வடிக்க அவனைப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே வெளியேறினார்.
விவேக்கிற்கு பெரும் வருத்தம் அதைவிட இவன் மீத அதீத கோபம். இருந்தும் நிச்சயமாக ஆரியன் அப்படி ஒரு தவறை செய்திருக்க மாட்டான் என்று விவேக் நம்பினான்.
"ஏன்டா இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ண?" என்று கேட்டான்.
இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆரியனின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வெளியேற தொடங்கியது. 'தெரியலடா அந்த நேரம் அது சரின்னு பட்டுச்சு அவளை எப்படியாவது இதிலயிருந்து காப்பாத்திடனும்னு மட்டும் தான் தோணுச்சு. ஆனா எனக்கு இங்க இருக்க பிடிக்கலடா" என்று முதல் முறை குழந்தை போல அழும் தன் நண்பனை கண்டு விவேக்கின் கண்களும் கலங்கியது ஆனால் இனி என்ன செய்ய இயலும் அதுதான் எல்லாமே முடிந்து விட்டது. இவனே சுயநினைவுடன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் இனி எப்படி இதனை மாற்றி அமைப்பது என்று புரியாமல் விவேக்கும் தடுமாறி நின்றான்.
கண்களை துடைத்துக்கொண்ட ஆரியன் "எனக்கே இந்த ஜெயில் வாழ்க்கை இவ்ளோ கஷ்டமா இருக்குன்னா, பாவம் சங்கவியால எப்படி இதை தாங்கி இருக்க முடியும்? அவளுக்காக தானே இந்த குற்றத்தை ஏத்துகிட்டேன் அது ஒரு விதத்தில் நிம்மதி தான்" இப்போதும் அவளை பற்றியே யோசிக்கும் தன் நண்பன் மீது கோவம் வந்தது.
"அப்புறம் என்னை பார்க்க அப்பாவும், அம்மாவும் ஏன் வரலை?" என்று கேட்டான்.
"இப்போதான் அவங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுறாங்களா? கண்டவளுக்காக பழியை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்கு போகும் போது அவங்க உன் கண்ணுக்கு தெரியலயா?"
"நீயும் என்னை திட்டி காயப்படுத்தாதடா விவேக். அவங்க ஏன் வரலன்னு சொல்லு"
"எனக்கு சரியா தெரியலடா ஆரி, ஆனால் அங்க ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க"
"என்ன பிரச்சனை?"
"அம்மாவையும் கயல்விழியையும் காணோம், உன் அப்பாவுக்கு பக்கவாதம் வந்திடுச்சு" என்று விவேக் சொல்ல சித்த பிரம்மை பிடித்தது போல உறைந்து நின்றான் ஆரியன்.
அதற்குள் விசிட்டிங் டைம் முடிய விவேக் அங்கிருந்து சென்றான்.
சிறைக்கு வந்த ஆரியனுக்கு இருப்புக் கொள்ளவில்லை தன் குடும்பத்தை பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அய்யாகண்ணு மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் ஆரியனுக்கு தெரிய வந்தது. விவேக்கின் தந்தை மூலம் போலீசிடம் பேசி இறுதிச் சடங்கிற்காக ஆரியனை வெளியை அழைத்து வர செய்தனர்.
தாத்தாவின் உடல் தகனத்திற்கு வைக்கப்பட்டிருக்க... அங்கு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் நீலகண்டன்.
விலங்கு பூட்டப்பட்டிருந்த கரத்துடன் தன் தந்தையை நோக்கிச் சென்றான் ஆரியன்.. மகனிடம் எதையோ சொல்ல எண்ணி பரிதவித்து கையசைக்க முற்பட்டார் ஆனால் முடியவில்லை. இதனை எல்லாம் கண்களில் வன்மத்தோடு நீலகண்டனின் சர்க்கர நாற்காலியைப் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் வேதாச்சலம் இந்திராவின் கணவன் யசோதாவின் தந்தை.