ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காரிருள் காரிகை- கதை திரி

Status
Not open for further replies.

T23

Moderator
காரிகை 1

"குட் மார்னிங் மேடம்" என்ற குரலில் நிமிர்ந்து பார்த்த லீலாவதி யார் நீ என்ற பார்வையை காட்ட அருகில் இருந்த அவளின் பிஏ தர்ஷன் " மேம் ஹாஸ்பிடல இருந்து டாக்டர் ராகவன் சார் அனுபிருக்காங்க " என்கவும்

லீலாவதி " சரி நீ வெளிய வெயிட் பண்ணு" என்று கூற தர்ஷன் வெளியே சென்றான்.

லீலாவதி "நீ தான் டாக்டர் ராகவன் ரெக்கமண்ட் பண்ண நர்ஸ் இனியாவா? என்கிறார்

இனியா " எஸ் மேம்" என்கவும்

லீலாவதி " பாக்க சின்ன பொண்ணா இருக்க நீ பார்க்க போற வேலைக்கு தகுந்த எக்ஸ்பீரியன்ஸ் உனக்கு இருக்குமானு தெரியலையே" என்கவும்

இனியா " அப்படி இல்லைன்னா ராகவன் சார் என்ன ரெக்கமண்ட் பண்ணி இருக்கமாட்டார் மேம்" என்றாள்.

லீலாவதி " சரி பாக்கலாம் இந்த வேலைக்கு வர நர்ஸ் யாருமே முழுசா முணு மாசம் கூட வர மாட்டேங்கறாங்க பார்க்கலாம்" என்க

இனியா " முயற்சி பண்றேன் மேம் தேங்க்ஸ் யூ " என்றவள் கிளம்பி சென்றாள்.



அடுத்த நாள் காலை

இனியா அவளுக்கு கொடுத்த அட்ரஸ் உள்ள வீட்டின் முன் வந்து நின்று பார்க்கவே பிரம்மாண்டமான வீட்டை இல்லை மாளிகையை பார்த்து வியந்து போய் நிற்க உடனே அங்கு வந்த வாட்ச்மென் யார் என விசாரிக்க

இனியா அவரிடம் அனுமதி கடிதம் காட்டி உள்ளே சென்றாள்.

வீட்டிற்கும் காம்பவுண்ட் சுவற்றுக்கும் இடையில் இன்னொரு வீடே கட்டலாம் என்ற அளவிற்கு பெரிய தோட்டம் இருந்தது

அதை ரசித்து கொண்டே உள்ளே செல்ல லீலாவதி ஹாலில் அமர்ந்து
பேப்பர் படித்து கொண்டு இருந்தார்.

இனியாவை பார்த்ததும் வரவேற்பாக புன்னகைத்து விட்டு அமர சொன்னார்.

அப்போது இனியாவிற்கு டீ கொண்டு வந்த அம்மாவை பார்த்து "ராணி பாப்பா வை பார்த்துக்க போற பொண்ணு இவங்க தான் பாப்பா ரூமுக்கு கூட்டிட்டு போ" என்றவர் இனியாவை பார்த்தது

இவங்க தான் இங்க சமையல் ஹெட் வேற ஏதாவது வேணும்னா இவங்க கிட்ட கேட்டுக்கோ என்றவர் மீண்டும் பேப்பருக்கு போய் விட்டார்.

டீ குடித்த இனியா பாப்பா என்று அழைக்கப்பட்ட அவளுடைய பேஷண்டை பார்க்க சென்றாள்.

மாடியில் இருந்த ஒரு பெரிய அறைக்கு இனியாவை அழைத்து சென்ற ராணி அறை கதவை திறந்ததும் பார்த்தது கை கால்கள் கட்டலுடன் சேர்த்து கட்டி வைக்க பட்ட இருபது வயது பெண்ணை தான்

இருபது வயது பெண் என்று தெரிந்து தான் வந்தாலும் பார்க்க பதினைந்து
வயது போல தான் இருந்தாள்.

ராணி " ஒரு மூணு வருசம் முன்னாடி மாடில இருந்து பாப்பா கீழே விழுந்துடுச்சுங்க அதுல இருந்து இப்படி ஆயிடுச்சு" என்றார்

இனியா "அதுக்கு எதுக்கு கை கால் எல்லாம் கட்டி வச்சி இருக்காங்க? " என்று கேட்க

ராணி "அது இன்னைக்கு நீங்க புதுசா வறீங்க இல்ல அதான் புது ஆளை பாத்தா பாப்பா பயங்கரமா பயப்படும் அப்றம் ஊசி போட்டு தூங்க வைப்பாங்க அதனால் இன்னைக்கு இப்படி இனி நீங்க தான் பாத்துக்கணும் " என்க

இனியா " சரி " என்று கூற ராணி கிளம்பி விட்டார்.

அதன் பின் இனியா படுக்கையில் இருந்த பெண்ணின் அருகில் சென்று அமர்ந்து தலைமுடியை வருடி கொடுக்க நீ தொடுவது எனக்கு பிடிக்கவில்லை என்பது போல முகத்தில் சுருக்கம் வந்தது.

இனியாவும் தூங்கும் பெண்ணை தொல்லை செய்யாமல் அவளின் அறையை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.

சுவற்றில் பிரியா என்று எழுதி அதன் அருகில் அவளின் பெரிய சைஸ் புகைப்படமும் இருந்தது.

புகைப்படத்திற்கும் நேரில் இருப்பவளுக்கும் ஆறிற்கும் மேற்பட்ட வித்தியாசம் இருந்தது.

முகம் வாடிப்போய் கை கால்களில் சில காயங்கள் உடல் இளைத்து கருத்து போய் இருந்தது.

இனியாவோ எப்படியாவது இந்த பெண்ணை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகியது.

அந்த அறையை சுற்றி பார்த்ததில் ப்ரியாவிற்கு அதிகம் பிடித்தம் பறவைகளில் இருப்பது போல் இருந்தது

அறை சுவர் முழுக்க விதவிதமான பறவைகளின் படங்கள் இருந்தன.

அதே போல் நிறைய டெடி பியர் பொம்மைகள் நிறைந்து ஒரு குழந்தையின் அறை போலவே இருந்தது.

அன்றைய தினம் பிரியாவின் மெடிக்கல் ரிப்போர்டை பார்ப்பதிலேயே கடந்தது.

அன்று முழுவதும் பிரியா அவளை பார்க்க விடவில்லை.

நாளையில் இருந்து பார்த்துக் கொள்ள சொல்லி இனியாவை கிளம்ப சொல்லிவிட்டார்.

இரவு வர தாமதமாகும் என்று கூறியவள் மாலையே வரவும் "என்னமா வர லேட் ஆகும்னு சொன்ன நேரமா வந்துட்ட " என்று இனியாவின் அன்னை கீதா கேட்கவும்

இனியாவின் தம்பி ப்ரித்வி "அக்கா போனதும் வேலை முடிஞ்சிருக்கும் அதான் சீக்கிரம் வந்துடுச்சு நீ போய் அக்காவுக்கு டீ கொண்டு வா " என்று அன்னையை விரட்ட

இனியா " அம்மா டீ வேணாம் அங்கேயே கொடுத்தாங்க குடிச்சிட்டு தான் வந்தேன் ஸ்ரீ எங்கமா இன்னும் ஆளையே காணோம்? " என்று கேட்க

கீதாவோ "வர நேரம் தான் பிரண்ட்ஸ் கூட பேசிட்டு லேட் பண்ணுவா வந்ததும் நீ கேளு அப்ப தான் நேரமா வருவா நா சொன்னா எங்க கேட்கறா அவ" என்று புலம்பியவாறு உள்ளே சென்றார்.

இனியாவின் வீடோ நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வீடு இரண்டு படுக்கை அறை சின்ன கிச்சன் ஒரு ஹால் வீட்டின் பின்புறம் பாத்ரூம் என அவர்களுக்கு போதுமான வீடு

ஸ்ரீ வீடு வரவும் ஏன் லேட் இனி இப்படி பண்ண கூடாது என்று கூறி பின் மூவரும் வீட்டின் பின்புறம் இருக்கும் சின்ன தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

ஸ்ரீக்கு சின்ன வயதில் இருந்தே செடி வளர்க்க ஆசைப்பட்டதை பார்த்து சொந்த வீடு கட்டும் போது தோட்டம் இருக்கனும் அப்படின்னு அடம் பண்ணி அவள் உருவாக்குன தோட்டம் இப்போ அது குடும்பத்திற்கு பிடித்த இடமாக இருந்தது.

தந்தை வந்ததை கூட கவனிக்காமல் மூவரும் எதைப்பற்றியோ பேசி கொண்டு இருக்க அங்கு வந்த கோபாலனோ பிள்ளைகள் சிரிப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக மனைவியிடம் கண் கலங்க "பிள்ளைகள் இப்ப இருக்க மாதிரி எப்பவும் இருக்கனும் கீதா அதான் என் ஆசை" கூற

கீதாவும் " நல்லது தான் நடக்கும் போய் முகம் கழுவிட்டு வாங்க " என்று கூறிவிட்டு செல்ல

தந்தை பார்த்த பிள்ளைகள் அவரையும் சேர்த்து வைத்து பேசி கொண்டு அந்த நாளை கடந்தனர்.
 

T23

Moderator
காரிகை 2

இனியா அந்த வீட்டிற்கு வேலைக்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகி இருந்தது.

பிரியாவிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை நீ வருவது எனக்கு தெரியும் என்றபடி அறைக்குள் வந்தால் வந்துட்டயா என்ற பார்வை மட்டுமே

ஒரு வாரத்தில் பிரியாவின் பழக்கம் என இனியா கண்டுபிடித்தது மார்னிங் எழுந்ததும் சன்னல் பக்கத்தில் போய் அமர்ந்து வெளியே உள்ள தோட்டத்தை வேடிக்கை பார்ப்பது உணவு பெரும்பாலும் கட்டாயப்படுத்தியே கொடுக்கப்படும்.

இனியா விற்கு இந்த உணவு பழக்கத்தில் உடன்பாடு இல்லை வயது பெண்ணிற்கு உரிய போசாக்கு இதில் இல்லை என்பதும் அவள் அதில் பாதி கூட உண்பதும் இல்லை.

டிவியில் கார்டூன் போட்டு அமைதியாக அமர்ந்து விடுவது இல்லை குழந்தை போல் கலவரிங் பண்ணுவது அதற்கு மேல் அதிக பட்ச மாத்திரை காரணமாக உறங்கிவிடுவாள்.

அன்றும் பிரியா மத்திய உணவை சாப்பிடாததால் அவளில் ஒரு கண் வைத்தபடி அந்த அறையில் இருந்து சாப்பிட ஆரம்பிக்க அதுவரை வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த பிரியா திடிரென்று இனியாவின் அருகில் வந்து அமர்ந்து சாப்பாடு ஊட்டுமாறு சைகை செய்ய இனியாவோ திகைப்பாக பார்க்க மீண்டும் ஆ காட்ட இனியாவும் சாப்பாடு ஊட்ட தொடங்கினாள்.

பிரியாவும் சாப்பாடு போதும் என்று தோன்றவும் அமைதியாக மீண்டும் சன்னல் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

இனியா அறையை விட்டு வெளியே வர ராணியே அமைதியாக பிரியாவை பார்த்தவாறு கதவருகே நின்றிருந்தார்.

இனியா சாரி என தொடங்க இடைமறித்த ராணி "பாப்பா இப்படி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுதுமா" என்று கண் கலங்க கூறிவிட்டு சென்றார்.

இனியாவோ இந்த குடும்பமே வித்தியாசமாக இருப்பதாக நினைத்தாள்.

பிரியாவின் அம்மாவிற்கு பிஸ்னஸ் பெற்ற மகளை விட முக்கியமாக இருப்பதாக தோன்றியது. இங்கு வந்த நாள் வரை அப்பா இங்கு இருப்பதாக தெரியவில்லை

இவர்களை தவிர ராணி சமையல் செய்பவர் தினமும் பார்க்கும் வாட்ச்மேன் தோட்டக்காரர் தவிர வீட்டில் வேறு யாரும் இல்லை

காலை முதல் மாலை வரை மட்டுமே இனியாவின் வேலை நேரம் இரவில் யார் பார்த்து கொள்வார்கள் என்ற கவலை தோன்றியது.

மாலை வீடு வந்ததும் தங்கை தம்பியுடன் அமர்ந்து டீ குடித்து விட்டு தந்தை வந்ததும் அவருடனும் பேசி கொண்டு இருக்க

பிரித்வி "அக்கா இப்போ நீ வேலைக்கு போற வீடு பெரிய வீடுனு சொன்ன இல்ல அந்த வீடு எப்படி அக்கா இருக்கும் என கேட்க"

கோபாலனோ "டேய் நானே உங்கள் அக்கா அங்க வேலைக்கு போறதுல இஷ்டம் இல்லைனு சொல்றேன் இதுல நீ எதுக்கு அந்த வீடு பத்தி கேட்குற ? "

இனியா "அப்பா அவனை பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி சொல்ல கூடாது" என்று கூற

கோபாலன் " பின்ன என்னமா எப்போதும் பார்த்தாலும் இது மாதிரி தான் பேசிகிட்டு இருக்கான் எனக்கு பயமா இருக்குமா" என்க


ஸ்ரீ " ஆமாப்பா எனக்கு கூட டவுட்டா இருக்கு"

பிரித்வி "உனக்கு என்ன டவுட்டு? "

ஸ்ரீ " வீடு பில்டிங் பத்தி பேசி பேசி நீ சிவில் இன்ஜினியரா வருவயா இல்ல கொத்தனரா வருவயானு தான் டவுட்டா இருக்கு" என்க

பிரித்வி ஸ்ரீயை அடிக்க பாய அவளும் ஓட இருவரையும் அடக்க முடியாமல் கோபாலன் குச்சியை கையில் எடுக்க இருவரும் சட்டென வந்து இனியாவின் அருகே அமர்ந்து கொண்டனர்.

அப்பாவிடம் இருந்து இருவரையும் காப்பாற்றி படிக்க அனுப்பி விட்டு அம்மாவிற்கு உதவ சமையல் அறைக்கு வந்து " நைட் என்னமா டிபன்? " என கேட்க

கீதா "சப்பாத்தி தான் மாவு பிசைந்துட்டேன் குருமாவும் ரெடி சாப்பிடும் போது தேய்ச்சா போதும்"

இனியா "சரி நான் தேய்ச்சி தரேன்" என்க

அவரும் சிரித்து கொண்டே "வேலை எப்படி மா போகுது" என்று கேட்க

இனியா "பெருசா எந்த வேலையும் இல்லமா அந்த பெண்ண பாத்துக்கனும் அதுவும் அமைதியா தான் இருக்கும் அடிப்பட்ட அதிர்ச்சியில பேசறதும் இல்ல பகல் டைம் நான் பாத்துக்கிறேன் நைட் யார் பாத்துப்பாங்கனு தெரியல அங்க எதோ தப்பா இருக்க மாதிரி இருக்குமா" என்க

கீதா "இங்க பாருமா நீ அங்க வேலைக்கு போறதுல எனக்கு விருப்பம் இல்லைனு உனக்கு நல்லா தெரியும் அது மாதிரி தான் உங்க அப்பாவுக்கும் நீ தான் போயே ஆகனும் அங்க வேலைக்கு போற பெரிய வீடுனு இருந்தா எதாவது இருக்க தான் செய்யும் நீ அந்த பெண்ண பாத்துக்கற வேலையை மட்டும் பாரு வேற எதுவும் நினைக்காத சரியா? " என்று கேட்க

இனியா "சரிமா " என்று கூறிவிட்டாலும் மனது தாய் சொல்லில் சமாதானம் ஆகாமலே இருந்தது. இப்படியே இருந்தால் அம்மா வேலைக்கு போக வேண்டாம் என்று கூறுவார் என நினைத்து தம்பி தங்கையை பார்க்க சென்றாள்.

கீதாவோ சாமி படங்களுக்கு முன் வந்து நின்று கடவுளே எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கோப்பா என்று பிராத்திக்க ஆரம்பித்தார்.
 

T23

Moderator
காரிகை 3

வழக்கம் போல இனியா வேலைக்கு செல்ல அன்று தான் லீலாவதியை மீண்டும் பார்த்தாள். கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்தது இருந்தது.

இனியா " குட் மார்னிங் மேடம்" என்க

லீலாவதி " மார்னிங்" என ஒரு வார்த்தையில் முடித்து விட்டு பைலில் ஆழ்ந்து விட இனியா பிரியா அறைக்கு சென்றாள்.

அங்கு இனியா பார்த்ததோ பிரியாவின் மேல் ஒருவன் கை போட்டு பேசிக்கொண்டு இருக்க பிரியாவோ தரையை பார்த்தவாறு தலை குனிந்து நின்று இருந்தாள்.

இனியா "பிரியா" என்று அழைக்க பிரியா அந்த ஆடவனின் கையை தட்டிவிட்டு வேகமாக வந்து அவளின் பின் வந்து நின்று கொண்டாள்.

இனியா "யார் நீங்க? " என்று கேட்க

அவனோ "நீ யார்? இங்க என்ன பண்ற? பிரியா இங்க வா" என்று அழைத்தது மட்டும் அன்றி பிரியாவை அவன் புறம் அழைக்க கையை நீட்ட இனியா அந்த கையை தட்டி விட்டாள்.

அப்போது அங்கு வந்த ராணி "தம்பி அவங்கதான் பாப்பாவ பாத்துக்க வந்திருக்கும் கேர் டேக்கர்" என்று கூறி விட்டு இனியாவிடம் "இவர் பாப்பாவோட அத்தை பையன் ராஜேஷ் தம்பி" என்க

இனியாவோ சரி என்ற தலைப்பில் அசைப்புடன் நின்று விட

ராஜேஷ் அப்பொழுது தான் அவளை கவனித்து பார்த்தான்.

முழு கை வைத்த சுடிதார் அணிந்து துப்பட்டாவை இருபுறமும் பின் பண்ணி முடியை பின்னல் போட்டு இருந்தாள். காதில் சின்ன தோடு, கழுத்தில் மெல்லிய சங்கிலி மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை.

பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு கதவு வரை சென்றவன் சட்டென திரும்பியவன் இனியா என்று அழைக்க இனியாவும் திரும்பி பார்க்க
ராஜேஷ் அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் பார்வை அவளின் முகத்தில் இருந்த மச்சத்தில் வந்து நின்றது.

அவன் காதுக்குள் பல வருடங்களாக கேட்கும் குரல் மீண்டும் கேட்க மச்சத்தில் பார்வை பதித்தவாறு அவன் அப்படியே நின்று விட இனியா அவனை சார் என்று சத்தமாக அழைக்கவும் கனவில் இருந்து விழித்தவன் போல சாரி என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

இனியாவும் பிரியாவிடம் வந்து "யாராவது உன்னை தொட்டு பேசறது பிடிக்கலனா நீங்க என்ன டச் பண்ணி பேசறது பிடிக்கலனு சொல்லிடணும் தெரிஞ்சவங்க தானே அப்படினு அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு கூடாது தப்பு யார் பண்ணாலும் தப்பு தான் பிடிக்கலனா பிடிக்கல அப்படினு சொல்லிடணும் புரியுதா? " என்று கேட்க அவளும் சரி என்று
தலையை ஆட்டினாள்.

அதன் பிறகு நேரம் ஓடிவிட பிரியா மத்திய உணவிற்கு பின்னர் உறங்கி விட அதற்கு மேல் பிரியாவின் அறையை கொஞ்சம் சரி செய்தபின் தோட்டத்தில் சிறிது நேரம் இருந்து வரலாம் என்று கிளம்பினாள்.

அப்போது அங்கு வந்த ராணி "வாம்மா நானே உன்னை தேடி தான் வந்தேன் பெரியம்மா ரூமில் ஒரு பைல் இருக்காம் அதை எடுத்து ட்ரைவர் கிட்ட குடுத்து விட சொன்னாங்கம்மா எனக்கு அது எதுனு தெரியலை நீ வாம்மா" என்று அழைக்க சரி இதை எடுத்து கொடுத்து விட்டு போகலாம் என்று ராணி கூறிய அறைக்கு சென்றாள்.

அங்கு அவர்கள் கூறி பைல் ஒரு மேசைக்குள் இருக்க அதை எடுத்து கொடுத்து விட்டு திரும்ப அங்கு இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் அப்படியே நிற்க ராணி யிடம் இந்த படத்தில் இருப்பவர் யார் என்று கேட்க

ராணியோ "இவங்க தான் பாப்பாவோட பெரியம்மா" என்றவர் குரலை குறைத்து இவங்க தான் ஐயாவோட முதல் மனைவி எனக்கு கூறி இனியாவை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து சென்றார்.

அங்கு இருந்து தோட்டத்தில் சென்று அமர்ந்த இனியா தன்னை மறந்து அங்கேயே ஏதோ ஒரு எண்ணத்தில் அமர்ந்து விட அப்பொழுது அங்கு வந்த ராஜேஷ் அவளை பார்த்து விட்டு அவளின் அருகே வந்து அமர்ந்தான்.

திடீரென தான் அருகில் யாரோ ஒருவர் வந்து அமரவும் தன் நினைப்பில் இருந்து வெளி வந்தவள் அமர்ந்தது யார் என பார்க்க தன்னை உரசியபடி அமர்ந்து இருந்தவனை பார்த்து சட்டென எழுந்து கொள்ள

அவனோ அவளையே பார்த்து கொண்டு இருக்க எரிச்சல் ஆன இனியா "சொல்லுங்க சார்" என்று கேட்க

ராஜேஷ் "நீங்க தான் சொல்லனும் வேலை நேரத்தில் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க மேடம்? " என்று எதிர் கேள்வி கேட்க

இனியா "பிரியா தூக்கிட்டு இருந்தாங்க அதான் கொஞ்சம் நேரம் வெளியே இருக்கலனு வந்தேன் சார்" என்கிறார்

ராஜேஷ் "என்ன இரண்டு மணி நேரமாவா? " என்று கேட்க

இனியா குழப்பத்துடன் கை கடிகாரத்தை பார்க்க மணி நான்கை தாண்டி இருக்க "சாரி சார் இனி இப்படி நடக்காம பார்த்து கொள்கிறேன்" என்று கூறி விட்டு உள்ளே செல்ல போக

ராஜேஷ் "நீங்க கிளம்பலாம் இனியா இனி நான் பார்த்துப்பேன் இனி கவனமா இருங்க" என்று கூறிவிட்டு கிளம்ப

இனியாவோ என்னாச்சு நமக்கு இப்படி இருக்க மாட்டோமே எதுக்கு அப்படி அவ்வளவு நேரம் அங்க இருந்தோம் என்று குழப்பத்துடன் செல்லும் அவளை தூரத்தில் இருந்து ராஜேஷ் பார்த்து கொண்டு இருந்தான்.
 

T23

Moderator
காரிகை 4

நேரமாக வேண்டும் வீடு திரும்பிய இனியா தலைவலிப்பதாக கூறிவிட்டு அறையில் சென்று படுத்து கொள்ள கீதாவோ இனியா விற்காக காபி கொண்டு வந்து கொடுக்க குடித்து விட்டு அவர் மடியிலேயே படுத்து உறங்கி விட்டாள்.

பள்ளி முடிந்து வந்த மகனையும் மகளையும் சமாளித்து இரவு உணவிற்கு இனியாவை எழுப்பினார்.

சண்டை இட்டு கொண்டு இருந்த தம்பி தங்கையின் மீது கவனம் இல்லாமல் உணவை அளந்து கொண்டு இருக்கவும் இனியாவின் தந்தை
"பாப்பா என்னடா ஆச்சி ஏன் ஒரு மாதிரியா இருக்க? " என்று கேட்க
இனியாவோ "ஒன்னும் இல்லப்பா லேசா தலைவலி அவ்வளவு தான் நல்லா தூங்கி எழுந்தா சரி ஆயிடும்" என்று கூற

தங்கையோ "வேலை அதிகமா இருக்கா அக்கா? " என்று கேட்க
தம்பியும் கேள்வியாக அக்காவை பார்க்கவும்

இனியா "ஒன்றும் இல்லடா தூங்கி எழுந்தா சரியாயிடும் சாப்பிட்டு போய் ரெண்டு பேரும் படிங்க" என்று கூறி விட்டு படுக்க சென்றுவிட்டாள்.

படுத்தும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டே இருக்க கீதா வந்து தட்டி கொடுத்து தான் தூங்கினாள்.

இனியா இறங்கியதும் கணவரிடம் வந்து அமர்ந்தவரிடம் அவர் " தூங்கிட்டாளா? " என்று கேட்க ஆம் என்று தலையசைத்தவர் "என்னவோ மனசே ஒரு மாதிரியான இருக்கு நாளைக்கு பசங்களுக்கு லீவ் தானே குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு வரலாமா? " என்று கேட்க அதுவும் ஒரு மாறுதலாக இருக்கும் என்று சரி என்றார்.

அடுத்த நாள் அனைவரையும் நேரத்திலேயே எழுப்பி சின்னவர்களுடன் போராடி இழுத்து கொண்டு கோவிலுக்கு சென்றனர்.

பூஜை முடிந்ததும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டு இருக்க பிரசாதம் கொடுக்க ஆரம்பிக்கவும் பிள்ளைகள் மூவரையும் அனுப்பிவிட்டு தெரிந்தவர்கள் உடன் பேச தொடங்கினர்.

வந்தவரோ இனியாவிற்கு என்ன வயது என்று கேட்க "உருவத்தில் நான்கு பொறந்துரிச்சி அக்கா" என்று கீதா கூற அவரோ "அப்போ கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா? " என்று கேட்க

கீதாவோ கணவரை ஒரு பார்வை பார்த்து விட்டு "இன்னும் இல்லைகா" என்க அவரோ "இப்பவே பாக்க ஆரம்பிங்க அதுவே சரியா இருக்கும் இதுக்கு அப்றம் இன்னொரு பொண்ணு இருக்கு இல்ல அதுக்கு வேற பன்னனும் " என்று கூறி விட்டு செல்ல

கீதாவும் கணவரிடம் " அடுத்தவங்க சொல்லிதான் நமக்கே தெரியுது பாருங்க" என்றவர் அவரிடம் "நீங்க என்ன நினைக்கிறீங்க? " என்று கேட்க அவரோ " கோவிலுக்கு வந்து நல்ல விஷயம் பேசிருக்கோம் இங்க இருந்தே ஆரம்பிக்கலாம் ஆனா அதுக்குள்ள பாப்பாக்கு கல்யாண வயசு வந்துருச்சானு இருக்கு " என்று கூற

கீதாவும் " ஆமாங்க இருந்தாலும் அது அத அந்த அந்த வயசுல பண்ணிடனும் நல்ல இடமா அமையனும் அதுதான் என் வேண்டுதல் " என்க அவரும் "நல்லதாவே நடக்கும் கவலை படாதே" என்று கூறி முடிக்கவும் பிள்ளைகள் வரவும் சரியாய் இருந்தது.

கீதா சின்னவர்கள் இருவரையும் தங்களுக்கு பிரசாதம் வாங்கி வர சொல்லி அனுப்பி விட்டு இனியா விடம் "பாப்பா உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கலாம்னு அப்பாவும் நானும் முடிவு பண்ணிருக்கோம்" என்க

இனியா "இப்பவே என்னமா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்க

கீதாவோ "இப்போ பார்க்க ஆரம்பிச்சாங்க தான் சரியான இருக்கும் பாப்பா நான் கேக்க வந்ததே வேற உனக்கு யார் மேலயாவது இஷ்டம் இருக்கா? " என்று கேட்க

இனியா மனதிற்குள் யாரையாவது காதலிக்கறயா என்பதை அம்மா இப்படி கேட்கிறார்கள் என நினைத்து கொண்டு "அப்படி எல்லாம் எதுவும் இல்லமா என்ன விட உங்களுக்கு தான் எனக்கு எது சரியா இருக்குனு தெரியும் உங்க விருப்பம்மா" என்று கூற பெற்றவர்கள் இருவருக்கும் மனதுக்கு நிறைவாக இருந்தது.
 
Status
Not open for further replies.
Top