அத்தியாயம் 35
சுபன் நேராக தாரணியிடம் வந்து அவள் மறைத்து வைத்திருந்த போனை பிடுங்கி எடுத்தவன், சரவணனின் கையை பிடித்து இழுத்து சென்று அங்கு ராஜவேல் அமர்வதற்காக போடப்பட்டிருந்த இருக்கையின் பின்னே சென்று நின்று கொண்டான்.
சரவணனுக்கோ அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தாரணி அவர்கள் இருவரையுமே பார்த்து இருக்க, சரவணனின் போனை அவனிடம் கொடுத்த சுபன், “ அசோக் இங்க வந்துட்டு இருக்கான். “என்று சொன்னான்.
சரவணனோ போனை சுபனிடம் இருந்து வாங்கியவன் ஆதேஷின் அழைப்பை துண்டிக்க, உள்ளே நுழைந்த அசோக், அவர்கள் இருவரும் அங்கு நிற்பதை பார்த்து, “ நான் இவ கிட்ட தனியா பேசணும். ஸோ கெட் அவுட். “ என்றான்.
சுபனோ, “அசோக் இது விசாரணை நடக்குற இடம். இங்க உன் தனிப்பட்ட கோவத்தை எல்லாம் காட்டாத. ஏற்கனவே அவளால முடியல. இதுக்கு மேலே தாருவ டார்ச்சல் பண்ணாத. “ என்றான்.
அசோக், சுபனை பார்த்து முறைத்தவன், “ உன்னோட பாசத்தை எல்லாம் மூட்டை கட்டி போடு. என்னை அவமான படுத்திட்டு அவன் கூட போயிருக்கா. இவளை எல்லாம் சும்மாவே விட கூடாது. “ என்று பேசிக்கொண்டே தாரணியின் கன்னத்தில் அறைந்தான்.
சரவணனுக்கு தலைக்கு மேல் கோபம் வந்தாலும் அதை காட்டிக் கொள்ள முடியாத நிலையில் அவன் விரல்களை பொத்தி அவன் தொடையில் அவனே குத்திக் கொண்டு நிற்க, சுபனோ, “அசோக், இதுக்கு மேலே அவ மேலே கை வச்சா நடக்குறது வேற. “ என்றான்.
அசோக் சுபனை மேலிருந்து கீழ் பார்த்தவன், “நீ இவளோட அக்காவை தானே லவ் பண்ணின. இவளை இல்லையே அப்புறம் இவளுக்கு அடிச்சா உனக்கு ஏன்டா வலிக்குது? “ என்று அசிங்கமாக பேச, சுபனோ பொறுமை இழந்தவன் அசோக்கை அடிக்க வர, தாரணியோ, “ சுபன் அண்ணா, இவன் கூட சண்டை போட்டு உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க. மற்றவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க தெரியாத மனிதமிருகம் இவன். “ என்றாள்.
சுபனோ அவளின் வார்த்தைகளை கேட்டு அவனை கட்டுபடுத்திக்கொண்டு நிற்க, அவனின் போன் அடித்தது.
அதை எடுத்தவன், தாரணியை பார்த்து, “ தர்மி கிட்ட இருந்த அதே தைரியம், பிடிவாதம் இரண்டுமே உன்கிட்ட இப்போ பல மடங்கு இருக்கு. உங்க அக்கா எப்பவுமே உன்னை நினைச்சிதான் கவலை படுவா. உனக்கு அதை பண்ணனும் இதை பண்ணனும் என்று சொல்லிட்டே இருப்பா. இப்போ அவ இல்லை. ஆனா அவ இப்போ இருந்திருந்தா என்ன முடிவு எடுத்திருப்பாளோ, அதே முடிவுல தான் நானும் இருக்கேன். எனக்கு எவனுக்கும் பயம் இல்லை. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உன் கூட இருப்பேன். “ என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.
சரவணனோ, “இவன் நமக்கு சப்போர்ட் பண்றானா? ஆனால் எதுக்கு? “ என்று நினைத்துக் கொண்டு சுபன் போனை அவன் காதில் வைத்து பேசிய படி செல்வதையே பார்த்து நின்றான்.
அசோக்கோ, “ ஏய், ரொம்ப ஆடாதடி. என்ன நடந்தாலும் கடைசில நீ என்னதான் கல்யாணம் பண்ணிக்கணும். “ என்று சொல்ல, கேலியாக புன்னகைத்த தாரணி, “ செத்தாலும் சாவனே தவிர உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். “ என்றாள்.
அசோக் கோபத்தில் அவளை இரு கெட்ட வார்த்தைகளை உபயோகித்து திட்டியவன், “ உங்க அப்பன் இருக்குற வரைக்கும் எனக்கு எந்த பயமும் இல்லை. நீ என்னதான் முரண்டு புடிச்சாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணியே தீருவேன். “ என்று சொல்லிக்கொண்டு இருக்க, ராஜவேல் ஒரு வைத்தியரை அழைத்துக்கொண்டு அங்கு நுழைந்தார்.
இதற்கிடையில் ஆதேஷ் விடாமல் சரவணனுக்கு அழைப்பை எடுத்துக் கொண்டு இருக்க, அவனும் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
வெளியே வந்த சரவணன் ஆதேஷின் அழைப்பை எடுத்து பேச “ என்னடா ஆச்சு? அங்க வந்தது யாரு? ஏதும் பிரச்சனையா? “ என்று கேட்க, சுபனை பற்றி அனைத்தையும் சொல்லி முடித்தான் சரவணன்.
ஆதேஷோ எளிதில் யாரையும் நம்ப மாட்டான், அதனால் சுபன் மீதும் அவன் சந்தேகபட்டு, “சரவணா அவனை விட்டு விலகியே இரு. “ என்றான்.
சரவணனோ, “சரி, பார்த்துக்கிறேன். “ என்று சொல்ல, “ தாரு.. அவ கிட்ட நீயாவது சொல்லி புரியவைடா. என்னோட உயிருக்கு எப்பவுமே உத்தரவாதம் இல்லை. நிச்சயம் இல்லாத வாழ்க்கையை அவள் என்னோட வாழ வேண்டாம். “என்றான் ஆதேஷ்.
சரவணன் இதை கேட்டிருந்தவன், “ ஆதேஷ் உன் மனசாட்சிக்கு உண்மையா நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. தாரணிய உனக்கு புடிச்சிருக்குல? “ என்று கேட்டான் .
ஆதேஷ் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க, “ நீ அமைதியா இருக்குறதிலையே உன்னோட பதில் தெரியுது. உன்னை நீயே ஏமாத்திக்காத. தாரணி இங்க இருக்குறது அவளுக்கு நல்லதில்லை. நானே அவளை அழைச்சிட்டு வந்து உன்கிட்ட விடுறேன்.” என்று சொன்னான் சரவணன்.
அப்போதும் ஆதேஷ் அமைதியையே கடைபிடிக்க, சிரித்துக்கொண்ட சரவணன், “எதுக்குடா இந்த வெட்டி பந்தா? வாய துறந்து அவளை எனக்கு புடிச்சிருக்கு என்று சொன்னா குறைஞ்சா போயிடுவ? உனக்கு சரியான ஆள் தாரணிதான். “ என்று சொல்லிக்கொண்டு இருக்க, சில பொலீஸ் அதிகாரிகள் தாரணி இருந்த அறையை நோக்கி ஓடுவதை அவதானித்தான் அவன்.
உடனே, “நான் அப்புறம் எடுக்குறேன். “ என்று சொல்லி ஆதேஷின் அழைப்பை துண்டித்தவன், அந்த பொலீசார் பின்னால் அவனும் ஓடினான்.
கதவை திறந்து உள்ளே சென்று அவன் கண்ட காட்சியில் தலையே சுற்றிபோனது அவனுக்கு.
தாரணியின் உடலில் அங்கும் இங்குமாக நிறைய வயர்கள் பொருத்தப்பட்டு இருக்க, அவளோ அங்கிருந்த கண்ணாடி குவளை ஒன்றை எடுத்து உடைத்து, மணி கட்டில் கிழித்துக்கொண்டு கையில் இரத்தம் வழிந்தபடி அமர்ந்திருந்தாள்.
அங்கிருந்த வைத்தியரோ அவள் உடலில் பொருத்தப் பட்டிருந்த வயர்களை கழற்றிக் கொண்டு இருக்க, ராஜவேலோ அவளின் அருகில் நின்றுகொண்டு, “ எதுக்குடி இப்படி பண்ணி தொலைச்ச? உன் உயிர விட அவனை காப்பாற்றுறது முக்கியமா உனக்கு? “ என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.
சரவணன் அங்கு இருந்த ஏற்பாடுகளை பார்த்தே, அவளின் சுயநினைவை மறக்க செய்து அவளின் வாயால் உண்மையை சொல்ல வைக்க முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைத்தவன், “ என்ன தாரு இப்படி பண்ணிட்ட? “ என்றுதான் நினைத்துக்கொண்டான்.
ராஜவேலோ அசோக்கை அழைத்தவர் அவளை தூக்கிக்கொண்டு ஜீப்பில் ஏற்றுமாறு சொல்ல, அவனும் அவரின் பேச்சை கேட்டு அவளை தூக்க போனான்.
தாரணியோ, “என் மேலே கையை வச்ச, இன்னொரு கையையும் அறுத்துப்பேன். “ என்று சொன்னவள்,கண்ணாடி துண்டை கையில் எடுத்து அடுத்த கையின் மணிகட்டில் வைத்துக்கொண்டு இருந்தாள்.
அவளது இந்த செய்கையால் அவமானமும் கோபமும் அடைந்த அசோக், மேலும் அங்கு நிற்காது வெளியேறி விட, சரவணனே அவள் அருகில் ஓடிச்சென்று அவளை தூக்கிக் கொண்டான்.
ராஜவேல் அவர் இருந்த மனநிலையில் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், “ சரவணன் சீக்கிரமா கொண்டு ஜீப்ல ஏத்துங்க. “ என்று சொல்ல அவனும் அவளை தூக்கிக் கொண்டு ஓடினான்.
தாரணியோ, “ அண்ணா, இப்போவாவது என்னோட லவ்வ ஆதேஷ் புரிஞ்சிப்பானா? “ என்று மெல்லிய குரலில் கேட்க, அவளை பார்த்த சரவணன், “ எதுக்கு அவசர பட்ட? “ என்று கேட்டான்.
அவளோ, “ என்னோட நினைவை மறந்து நானே ஏதோ உளறுற மாதிரி பீல் ஆச்சு. அதுதான் ஆதேஷ் பற்றி ஏதும் சொல்லிடுவனோ என்று பயந்து இப்படி பண்ணிட்டேன். “ என்றவள் அப்படியே மயங்கி சரவணனில் சாய்ந்தாள்.
அவனும் அவளது பேச்சில் கலங்கி போனவன், அவளை ஜீப்பில் ஏற்றி அவனும் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, ராஜவேல் ஜீப்பை ஒட்டி ஹாஸ்ப்பிட்டல் நோக்கி சென்றார்.
சுபன் நேராக தாரணியிடம் வந்து அவள் மறைத்து வைத்திருந்த போனை பிடுங்கி எடுத்தவன், சரவணனின் கையை பிடித்து இழுத்து சென்று அங்கு ராஜவேல் அமர்வதற்காக போடப்பட்டிருந்த இருக்கையின் பின்னே சென்று நின்று கொண்டான்.
சரவணனுக்கோ அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தாரணி அவர்கள் இருவரையுமே பார்த்து இருக்க, சரவணனின் போனை அவனிடம் கொடுத்த சுபன், “ அசோக் இங்க வந்துட்டு இருக்கான். “என்று சொன்னான்.
சரவணனோ போனை சுபனிடம் இருந்து வாங்கியவன் ஆதேஷின் அழைப்பை துண்டிக்க, உள்ளே நுழைந்த அசோக், அவர்கள் இருவரும் அங்கு நிற்பதை பார்த்து, “ நான் இவ கிட்ட தனியா பேசணும். ஸோ கெட் அவுட். “ என்றான்.
சுபனோ, “அசோக் இது விசாரணை நடக்குற இடம். இங்க உன் தனிப்பட்ட கோவத்தை எல்லாம் காட்டாத. ஏற்கனவே அவளால முடியல. இதுக்கு மேலே தாருவ டார்ச்சல் பண்ணாத. “ என்றான்.
அசோக், சுபனை பார்த்து முறைத்தவன், “ உன்னோட பாசத்தை எல்லாம் மூட்டை கட்டி போடு. என்னை அவமான படுத்திட்டு அவன் கூட போயிருக்கா. இவளை எல்லாம் சும்மாவே விட கூடாது. “ என்று பேசிக்கொண்டே தாரணியின் கன்னத்தில் அறைந்தான்.
சரவணனுக்கு தலைக்கு மேல் கோபம் வந்தாலும் அதை காட்டிக் கொள்ள முடியாத நிலையில் அவன் விரல்களை பொத்தி அவன் தொடையில் அவனே குத்திக் கொண்டு நிற்க, சுபனோ, “அசோக், இதுக்கு மேலே அவ மேலே கை வச்சா நடக்குறது வேற. “ என்றான்.
அசோக் சுபனை மேலிருந்து கீழ் பார்த்தவன், “நீ இவளோட அக்காவை தானே லவ் பண்ணின. இவளை இல்லையே அப்புறம் இவளுக்கு அடிச்சா உனக்கு ஏன்டா வலிக்குது? “ என்று அசிங்கமாக பேச, சுபனோ பொறுமை இழந்தவன் அசோக்கை அடிக்க வர, தாரணியோ, “ சுபன் அண்ணா, இவன் கூட சண்டை போட்டு உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க. மற்றவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க தெரியாத மனிதமிருகம் இவன். “ என்றாள்.
சுபனோ அவளின் வார்த்தைகளை கேட்டு அவனை கட்டுபடுத்திக்கொண்டு நிற்க, அவனின் போன் அடித்தது.
அதை எடுத்தவன், தாரணியை பார்த்து, “ தர்மி கிட்ட இருந்த அதே தைரியம், பிடிவாதம் இரண்டுமே உன்கிட்ட இப்போ பல மடங்கு இருக்கு. உங்க அக்கா எப்பவுமே உன்னை நினைச்சிதான் கவலை படுவா. உனக்கு அதை பண்ணனும் இதை பண்ணனும் என்று சொல்லிட்டே இருப்பா. இப்போ அவ இல்லை. ஆனா அவ இப்போ இருந்திருந்தா என்ன முடிவு எடுத்திருப்பாளோ, அதே முடிவுல தான் நானும் இருக்கேன். எனக்கு எவனுக்கும் பயம் இல்லை. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உன் கூட இருப்பேன். “ என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.
சரவணனோ, “இவன் நமக்கு சப்போர்ட் பண்றானா? ஆனால் எதுக்கு? “ என்று நினைத்துக் கொண்டு சுபன் போனை அவன் காதில் வைத்து பேசிய படி செல்வதையே பார்த்து நின்றான்.
அசோக்கோ, “ ஏய், ரொம்ப ஆடாதடி. என்ன நடந்தாலும் கடைசில நீ என்னதான் கல்யாணம் பண்ணிக்கணும். “ என்று சொல்ல, கேலியாக புன்னகைத்த தாரணி, “ செத்தாலும் சாவனே தவிர உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். “ என்றாள்.
அசோக் கோபத்தில் அவளை இரு கெட்ட வார்த்தைகளை உபயோகித்து திட்டியவன், “ உங்க அப்பன் இருக்குற வரைக்கும் எனக்கு எந்த பயமும் இல்லை. நீ என்னதான் முரண்டு புடிச்சாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணியே தீருவேன். “ என்று சொல்லிக்கொண்டு இருக்க, ராஜவேல் ஒரு வைத்தியரை அழைத்துக்கொண்டு அங்கு நுழைந்தார்.
இதற்கிடையில் ஆதேஷ் விடாமல் சரவணனுக்கு அழைப்பை எடுத்துக் கொண்டு இருக்க, அவனும் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
வெளியே வந்த சரவணன் ஆதேஷின் அழைப்பை எடுத்து பேச “ என்னடா ஆச்சு? அங்க வந்தது யாரு? ஏதும் பிரச்சனையா? “ என்று கேட்க, சுபனை பற்றி அனைத்தையும் சொல்லி முடித்தான் சரவணன்.
ஆதேஷோ எளிதில் யாரையும் நம்ப மாட்டான், அதனால் சுபன் மீதும் அவன் சந்தேகபட்டு, “சரவணா அவனை விட்டு விலகியே இரு. “ என்றான்.
சரவணனோ, “சரி, பார்த்துக்கிறேன். “ என்று சொல்ல, “ தாரு.. அவ கிட்ட நீயாவது சொல்லி புரியவைடா. என்னோட உயிருக்கு எப்பவுமே உத்தரவாதம் இல்லை. நிச்சயம் இல்லாத வாழ்க்கையை அவள் என்னோட வாழ வேண்டாம். “என்றான் ஆதேஷ்.
சரவணன் இதை கேட்டிருந்தவன், “ ஆதேஷ் உன் மனசாட்சிக்கு உண்மையா நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. தாரணிய உனக்கு புடிச்சிருக்குல? “ என்று கேட்டான் .
ஆதேஷ் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க, “ நீ அமைதியா இருக்குறதிலையே உன்னோட பதில் தெரியுது. உன்னை நீயே ஏமாத்திக்காத. தாரணி இங்க இருக்குறது அவளுக்கு நல்லதில்லை. நானே அவளை அழைச்சிட்டு வந்து உன்கிட்ட விடுறேன்.” என்று சொன்னான் சரவணன்.
அப்போதும் ஆதேஷ் அமைதியையே கடைபிடிக்க, சிரித்துக்கொண்ட சரவணன், “எதுக்குடா இந்த வெட்டி பந்தா? வாய துறந்து அவளை எனக்கு புடிச்சிருக்கு என்று சொன்னா குறைஞ்சா போயிடுவ? உனக்கு சரியான ஆள் தாரணிதான். “ என்று சொல்லிக்கொண்டு இருக்க, சில பொலீஸ் அதிகாரிகள் தாரணி இருந்த அறையை நோக்கி ஓடுவதை அவதானித்தான் அவன்.
உடனே, “நான் அப்புறம் எடுக்குறேன். “ என்று சொல்லி ஆதேஷின் அழைப்பை துண்டித்தவன், அந்த பொலீசார் பின்னால் அவனும் ஓடினான்.
கதவை திறந்து உள்ளே சென்று அவன் கண்ட காட்சியில் தலையே சுற்றிபோனது அவனுக்கு.
தாரணியின் உடலில் அங்கும் இங்குமாக நிறைய வயர்கள் பொருத்தப்பட்டு இருக்க, அவளோ அங்கிருந்த கண்ணாடி குவளை ஒன்றை எடுத்து உடைத்து, மணி கட்டில் கிழித்துக்கொண்டு கையில் இரத்தம் வழிந்தபடி அமர்ந்திருந்தாள்.
அங்கிருந்த வைத்தியரோ அவள் உடலில் பொருத்தப் பட்டிருந்த வயர்களை கழற்றிக் கொண்டு இருக்க, ராஜவேலோ அவளின் அருகில் நின்றுகொண்டு, “ எதுக்குடி இப்படி பண்ணி தொலைச்ச? உன் உயிர விட அவனை காப்பாற்றுறது முக்கியமா உனக்கு? “ என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.
சரவணன் அங்கு இருந்த ஏற்பாடுகளை பார்த்தே, அவளின் சுயநினைவை மறக்க செய்து அவளின் வாயால் உண்மையை சொல்ல வைக்க முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைத்தவன், “ என்ன தாரு இப்படி பண்ணிட்ட? “ என்றுதான் நினைத்துக்கொண்டான்.
ராஜவேலோ அசோக்கை அழைத்தவர் அவளை தூக்கிக்கொண்டு ஜீப்பில் ஏற்றுமாறு சொல்ல, அவனும் அவரின் பேச்சை கேட்டு அவளை தூக்க போனான்.
தாரணியோ, “என் மேலே கையை வச்ச, இன்னொரு கையையும் அறுத்துப்பேன். “ என்று சொன்னவள்,கண்ணாடி துண்டை கையில் எடுத்து அடுத்த கையின் மணிகட்டில் வைத்துக்கொண்டு இருந்தாள்.
அவளது இந்த செய்கையால் அவமானமும் கோபமும் அடைந்த அசோக், மேலும் அங்கு நிற்காது வெளியேறி விட, சரவணனே அவள் அருகில் ஓடிச்சென்று அவளை தூக்கிக் கொண்டான்.
ராஜவேல் அவர் இருந்த மனநிலையில் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், “ சரவணன் சீக்கிரமா கொண்டு ஜீப்ல ஏத்துங்க. “ என்று சொல்ல அவனும் அவளை தூக்கிக் கொண்டு ஓடினான்.
தாரணியோ, “ அண்ணா, இப்போவாவது என்னோட லவ்வ ஆதேஷ் புரிஞ்சிப்பானா? “ என்று மெல்லிய குரலில் கேட்க, அவளை பார்த்த சரவணன், “ எதுக்கு அவசர பட்ட? “ என்று கேட்டான்.
அவளோ, “ என்னோட நினைவை மறந்து நானே ஏதோ உளறுற மாதிரி பீல் ஆச்சு. அதுதான் ஆதேஷ் பற்றி ஏதும் சொல்லிடுவனோ என்று பயந்து இப்படி பண்ணிட்டேன். “ என்றவள் அப்படியே மயங்கி சரவணனில் சாய்ந்தாள்.
அவனும் அவளது பேச்சில் கலங்கி போனவன், அவளை ஜீப்பில் ஏற்றி அவனும் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, ராஜவேல் ஜீப்பை ஒட்டி ஹாஸ்ப்பிட்டல் நோக்கி சென்றார்.