ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இம்சைக் காவலன்- கதை திரி

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 1

“அக்கா!!, " என்று சரண் அழைத்த சத்தத்திலே கண்விழித்தாள் சான்யா.”அக்கா உனக்கு ரொம்ப வலிக்குதா, என்ன மன்னிச்சுக்கோ. என்னாலதான் பெரியம்மா நேற்று உன்ன அடிச்சாங்க”என்று கண்கலங்கி மேலும் பேச தொடர்ந்தவனிடம்,“இப்போ எதுக்கு கண்கலங்குற?எனக்கு ஒன்றுமில்லை. நான் நல்லாத்தான் இருக்கன்.”என்றபடியே சுவரில் இருந்த கடிகாரத்தை பார்க்க அது ஏழு மணியை காட்டியது. “சரண் ரொம்ப லேட்டாயிடிச்சுடா போய் ரெடியாகு. நானும் ரெடி ஆகிட்டு வாறன். “என்று படுக்கையில் இருந்து எழுந்தாள் சான்யா.

அவள் அருகில் வந்த சரண் அவள் கன்னத்தை பார்த்து, “ அக்கா அவங்க ஏன் உன்ன அடிக்குறாங்க?பாரு உன் கன்னம் எப்படி வீங்கிருக்கென்று. “ அப்போதுதான் முன்னே இருந்த கண்ணாடியுடு அவள் முகத்தை பார்த்தாள் சான்யா.

பால் வெள்ளை நிற தேகமும், இயற்கையாக அடர்ந்து வளர்ந்த புருவமும், முழங்காலளவு இருக்கும் நீண்ட தலைமுடியையும்,மெலிந்தும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் அளவான உடலமைப்பு கொண்டவள் சான்யா.மேக்அப் ஏதும் அவளுக்கு தேவையில்லை. இயற்கை அழகில் ஜொலிப்பவள்.

அவ்வாறு இருந்த அவள் கன்னமதில், அவள் பெரியம்மாவனா வாசுகியின் கையச்சு தெரிந்தது. நேற்று இரவு சரணிற்காக நடந்த சண்டையில் சரணை காக்கும் பொருட்டு இவள் இடையில் வந்ததால் இவளின் கன்னம் வீங்கிருந்தது.

பதினாறு வயதுடைய சரண் பாஸ்கெட்பால் விளையாட்டில் அதிக நாட்டம் உடையவன். பாஸ்கெட் பால் விளையாட வேண்டும், அதில் சாதனைகள் புரிய வேண்டும் என்பது அவன் கனவு. அவன் ரோல்மாடல்” அர்ஜுன் “என்னும் ஒரு பாஸ்கெட்பால் விளையாட்டு வீரனே. ஸ்கூல் முடிந்து சான்யாவிற்காக பஸ்ஸ்டாண்ட்ல் காத்திருக்கும் போது, பஸ்ஸ்டாண்ட் முன்னால் உள்ள பாஸ்கெட்பால் விளையாடும் இடத்தில் அர்ஜுன் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருப்பான். அவனின் அட்டிடியுட், விளையாடும் விதம் எல்லாமே அவனுக்கு பிடித்து போக அவனது தீவிர ரசிகன் ஆகிவிட்டான்.

அவன் விளையாடி வந்தவுடன் அவனிடம் சென்று பேசுவான். பாஸ்கெட்பால் பற்றி நிறைய விடயங்களை கேட்டறிந்து கொள்வான். அர்ஜுனும் அவன் ஆர்வம் கண்டு அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பான். ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருந்த நேரம், அர்ஜுன் சரணை பாஸ்கட்டபால் கோச்சிங் சேர்த்துவிடுவதாகவும், அவனுக்கான முழு செலவையும் அவனே பார்த்துக்கொள்வதாகவும் சொல்லி சரணிடம் சொல்லிருக்க, அவன் சான்யாவிடம் சொல்லி அடம்பிடித்து சம்மதமும் வாங்கிருந்தான்.

ஆனால், அவனை கோச்சிங் வகுப்பில் சேர்ப்பதற்கு முதல் நாள் நடந்த வாகனவிபத்தில் சிக்கி அர்ஜுன் இறந்திருந்தான்.இதை அறிந்த சரண், அர்ஜுனை நினைத்து அழாத நாட்களில்லை,இன்றும் அவனை நினைத்து வருந்திக்கொண்டிருப்பவன் அவன்.அவனது இன்ஸ்பிரேசன் ஆக இருந்த அர்ஜுன் இறந்ததை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. பாஸ்கெட்பால் மேலிருந்த அவனது நாட்டம் இன்னும் அதிகமானது. அர்ஜுன் அவனுடன் பகிர்ந்த அவனுடைய கனவுகளையும் இவன் செய்து முடிக்க எண்ணினான்.

அவ்வாறே அன்று இரவு அவனது பெரியம்மாவான வாசுகியிடம், பாஸ்கட்பால் கோச்சிங் கிளாஸ் சேர வேண்டும் என்று பணம் கேட்க அவனை திட்டி அடிக்க வந்த வாசுகியை தடுக்க இடையில் வந்த சான்யா அறை வாங்கிருந்தாள்.

சரணிடம், “அதெல்லாம் ஒன்றும் இல்லைடா. எனக்கு காலேஜ் போகவும் டயம் ஆகுது, போய் ரெடி ஆகு சீக்கிரம் போகணும். “என்று சொல்லிவிட்டு காலேஜ்ற்கு செல்ல சான்யா தயாராக, சரணும் பள்ளி செல்ல ஆயத்தமானான்.

தம்பி மீது அளவில்லா அன்பை பொழிபவள் சான்யா.சரண் பிறந்த ஆறு வருடங்களில் அவர்களின் அம்மா நீரேடுக்க குளத்தடி சென்றபோது அங்கே வழுக்கி விழுந்து, தலையில் பலத்த அடி பட்டு படுத்தபடுக்கை ஆகிவிட்டவர், சில மாதங்களிலே காலமாகி இருந்தார். அப்போது சான்யாவின் வயது பத்து.

சான்யாவின் அப்பா சுதகாரின் காதல் மனைவிதான் அவர்களின் அம்மா செல்லம்மா.சுதாகரிற்கு ஏற்கனவே திருமணமாகி வாசுகி என்ற மனைவியும்,அவர்களுக்கு சௌமியா என்ற மகளும் இருந்தாள். இதை அனைத்தும் அறிந்தே சுதாகருடன் இல்லறம் நடத்தினாள் செல்லம்மா. சுதாகர் வாசுகியையும், சௌமியாவையும் பிரிந்து வந்து இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.அழகிய கிராமமதில் இவர்களின் வாழ்கை நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது அவர்களின் தாயான செல்லம்மா இறக்கும் வரையில்.

செல்லம்மா இறந்த பின்னர் சுதாகரிற்கு அங்கு வாழ பிடிக்கவில்லை அவரது காதல் மனைவியின் நினைவுகள் அவரை வாட்டிக்கொண்டிருக்க அவரின் உடல்நிலையும் மோசமாக இருந்தது. இதேவேளை சான்யா மற்றும் சரணை கவனித்துக்கொள்ளவும் யாரும் இல்லாதநிலையில்தான் அவர்களை தனது முதல் மனைவியான வாசுகியிடம் கொண்டு சேர்த்தார். சான்யாவையும், சரணையும் வாசுகியிற்கு பிடிக்கவே இல்லை. எப்போதும் அவர்களை வசைபாடிக்கொண்டிருந்தார்.

அதேவேளை வாசுகியின் மகளான சௌமியாவிற்கும் இவர்களை கண்டால் பிடிக்காது. எந்நேரமும் அவர்களின் மனதை நோகடித்துக்கொண்டே இருப்பாள். சான்யா அனைவரிடமும் நற்பெயர் வாங்குவதும், அவளை சுற்றத்தவர்கள் பாராட்டுவதையும் அவள் படிப்பு திறனையும் அவள் அழகையும் கண்டு பொறாமை கொண்டாள் அவள்.

இதை அனைத்தையும் சுதாகர் கவனித்தாலும், சான்யாவிற்கும், சரணுக்கும் இதுவே பாதுகாப்பான இடம் என்று நினைத்தவர், சான்யா மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். என்ன பிரச்சனை வந்தாலும் அவள் சமாளித்து தன் தம்பியை கரைசேர்ப்பாள் என்றும் அவள் வாழ்க்கையை அவள் நன்றாக அமைத்து இந்த நரகவாழ்க்கையில் இருந்து வெளிவருவாளேன்றும் .இவ்வாறு சில நாட்களிலேயே செல்லம்மாவை நினைத்து நினைத்து வருந்தி தனது உயிரைவிட்டார் சுதாகர்.இப்படி ஒரு நிலையில்தான் தனது தம்பியை முழுப்பொறுப்பெடுத்து கவனித்துக்கொண்டாள் சான்யா.அவளின் உலகம் சரணை சுற்றியும், சரணின் உலகம் அவளையும், அவன் கனவுகளையும் சுற்றியும் ஓடிக்கொண்டிருந்தது.

இதே நேரத்தில், கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களால் அமைக்கப்பட்டிருந்த அந்த கடற்கரையோர மாளிகையின் வாசல் வழி பிரவேசித்தது அந்த சிவப்பு நிற உயர்ரக கார்.

காரில் இருந்து இறங்கிய கார்த்திக் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த நேரம் ஹாலினுள் இருந்த கடிகாரம் மணி எட்டை நெருங்கி கொண்டிருக்க,அங்கு மேசையில் இருந்த சரக்கு பாட்டில்களை வீட்டின் வேலைக்காரரான முத்து எடுத்து கிளீன் செய்துகொண்டு இருந்தார்.”கார்த்திக்கோ, “குடிக்காத என்றால் கேக்குறான இவ்வளவு குடிச்சா உடம்பு என்னத்துக்கு ஆகுறது?”என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒரு பெண் மாடிப்படிகளில் இருந்து இறங்கிவந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து திரும்பி நின்ற கார்த்திக்கிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தன.

அந்த பெண் கார்த்திக்கை கடந்து வீட்டைவிட்டு வெளியேறியதும், கார்த்திக் அருகே வந்து அவன் முதுகில் கைபோட்டான் விஷ்ணு.அவன் கைப்போட்டதை வைத்தே அது விஷ்ணுதான் என்றறிந்த கார்த்திக், “உன்கிட்ட எத்தனை தடவ சொல்றது விஷ்ணு பொண்ணுகளை வீட்டுக்கு கூட்டி வராத என்று, தப்பு பண்ற விஷ்ணு இத நினைச்சு ஒரு நாள் பீல் பண்னுவடா. “என்றான்.விஷ்ணுவோ, “என்ன பண்ற மச்சான் நான் தேடி போகலையே நேத்து பப் போனேன் அங்க அவதான் என்கூட வந்தா.பணம் என்றதுமே வாலாட்டிட்டு பின்னாலயே வருவாளுகள் டா. பசங்கள ஏமாத்துறதுல இப்படியான சில பொண்ணுகள் பி.எச். டி முடிச்சிருப்பாளுகள் போல. “என்றான் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை வைத்துக்கொண்டு.

அவன் பேச்சில் முகம் சுழித்த கார்த்திக்கோ, “இப்போ மீட்டிங் போகணும் அந்த அமெரிக்கா ப்ராஜெக்ட் பைல்ஸ் எல்லாமே பார்த்து நீ சைன் போடணும் கூடவாடா. “என்றான் கோபமாக.

விஷ்ணுவோ,“அதெல்லாம் நான் நேற்று சைன் பண்ணி கொடுத்துட்டன்.நைட் ரகு என்ன பார்க்க வரும் போது பைல்ஸ் எல்லாமே கொண்டு வந்து சைன் வாங்கிட்டு போய்ட்டான் மச்சா. நீ கூட இருந்து பார்த்துக்கோ. என்னால எல்லாம் எங்கேயும் வர முடியாது. “என்று சொல்லியபடியே சென்று பிரிட்ஜ்ஜை துறந்தவன் அங்கிருந்த பீர் பாட்டில்களை எடுத்து குடிக்க தொடங்கிருந்தான். கார்த்திக்கோ, “காலையிலையே குடிக்கதொடங்கிட்டியாடா? ஏன் இப்படி பண்ற உன் வாழ்க்கைல மட்டுமா பிரச்சனை இருக்கு இப்படி குடிச்சு குடிச்சு வாழ்க்கையை தொலைச்சிடாதடா.மற்றது ஒன்று சொல்றன் கேட்டுக்கோ உன்ன சுற்றி இருக்குற எல்லாரையும் கண்ணமூடிட்டு நம்பாத இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும். “என்றான்.

குடித்தபடியே கார்த்திக் சொல்வதை கேட்ட விஷ்ணு, “மச்சா நீ கந்தசாமி அங்கிளையும், ரகுவையும் தான் சொல்ற என்று நல்லா தெரியும் எனக்கு. ஆனால் அவங்க தான் என்ன எடுத்து வளர்த்தாங்க. அவங்க சின்னசின்னதா கம்பெனி விஷயத்துல பிராடு பண்ணுவாங்க. அதை தாண்டி அவங்க என்கிட்ட நேரடியா மோதமாட்டாங்கடா அப்படி மோதினா அவங்க நிலைமை என்ன என்று அவங்களுக்கே தெரியும். சரி டா நீ மீட்டிங் போ டயம் ஆகுது.வேற ஏதும் விஷயம் இருந்தால் ஈவினிங் வீட்டுக்கு வரும் போது சொல்லு. “என்று சொல்லி கார்த்திக்கின் பதிலை எதிர்பார்க்காமல் தனது வீட்டில் உள்ள ஜிம் அறைக்குள் சென்று கதவை சாற்றினான்.

அவன் செல்வதை பார்திருந்த கார்த்திக், “இவன் பழைய மாதிரி மாறினா நன்றாகஇருக்கும்.”என்று நினைத்துவிட்டு. அங்கு நின்ற வேலைக்காரன் முத்துவிடம், “விஷ்ணுவ பார்த்துக்கோங்க அண்ணா.“என்று சொல்லி காரை எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு சென்றிருந்தான்.

ஆறடிஉயரமும்,வெள்ளை தேகமும், அடர்ந்த தாடியும் கம்பீரமான தோற்றமும் உடையவனே விஷ்ணு. வி. ஏ கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியின் சி.இ.ஓ.அவன் பள்ளி படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே அவனது தாய் செல்வியும் அவனது தந்தை ராஜாவும் அவர்களது கம்பெனியில் மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் மாட்டி இறந்திருந்தனர். அதன் பின்னரே விஷ்ணுவின் தந்தையின் நண்பரான கந்தசாமி விஸ்ணுவை எடுத்து அவரது மகனான ரகுவுடன் சேர்த்து வளர்த்திருந்தார். அந்த நன்றிக்காகவே அவர்கள் இவனிடத்தில் பணவிஷயத்தில் மோசடி செய்தாலும் இவன் கண்டுகொள்வதில்லை.பணம் தானே போனால் திருப்ப உழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தான். ஆனால் அவன் அறியவில்லை அவர்கள் அவனை வீழ்த்த பல திட்டங்கள் போட்டு செயற்படுத்தியதை.

விஷ்ணுவின் ஆருயிர் நண்பன்தான் கார்த்திக். நேர்மை, நியாயம் என்ற கொள்கைகள் உடையவன். யாரையும் ஏமாற்றி வாழக்கூடாது என்பதில் உறுதியாக நிற்ப்பவன்.அம்மா, அப்பா என்ற உறவுகளே யார் என்று அறியாது தன்னந்தனியே ஆச்சிரமத்தில் வளர்ந்தவன்.காலேஜ் நாட்களியே விஷ்ணு மற்றும் கார்த்திக்கின் நட்பு பயணம் தொடங்கியது. அதன் பின்னரே இருவரும் இணைந்து, விஷ்ணுவின் அம்மா அப்பாவின் இறப்பின் பின்னர் வீழ்ச்சி அடைந்த அவர்களின் கம்பெனியை மீட்டு இன்று டாப் பைவ் பொசிஷனில் நிறுத்திஇருந்தனர்.அதன் பின் சில மாதங்கள் முன்பு விஷ்ணுவின் வாழ்வில் நடந்த இழப்புக்கள் அவன் வாழ்வை புரட்டி போட்டிருந்தது. அவனின் செயல்கள் , எண்ணங்கள் அனைத்தும் மாறியிருந்தது.இன்று வரை அந்த ரணங்கள் தந்த வலியில் இருந்து மீள முடியாமல் விஷ்ணுவும்,அவனை பழையபடி மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அவனது நண்பர்கள் இருவரும் தங்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

இதே வேளையில் வாசுகியின் வீட்டில், காலேஜ் செல்ல ஆயத்தம் ஆன சான்யாவும், பள்ளி செல்ல ஆயத்தம் ஆன சரணும் ஒருங்கே வெளியே வர அங்கு நின்றிருந்த வாசுகியோ, “இந்த எருமைமாடுகளிற்கு படிப்பு ஒன்றுதான் குறை.இதெல்லாம் விட்டுட்டு வேலைக்கு போனாலாச்சும் வீட்டு செலவுக்கு பணம் கிடைக்கும். நானே எத்தனை நாள் உழைக்குறது. வீடு வீடா போய் பாத்திரம் கழுவியே என் இடுப்பெலும்பு உடைய போகுது.சான்யா எத்தனை தரம் சொல்லிருக்கன் என்கூட வேலைக்கு வா என்று.“என்று புலம்ப இதை கேட்டு கொண்டிருந்த சரணோ, “ஏன்?சான்யா அக்கா தானா உங்க கூட வேலைக்கு வரணும்?சௌமியா அக்கா வீட்ட சும்மா தானே இருக்காங்க அவங்கள கூட்டிட்டு போகலாமே!”என்றான்.

இதை கேட்ட சான்யாவோ, “சரண் சும்மா இருடா கொஞ்சம்.”என்று சொல்லிக்ககொண்டிருக்கும் போதே சௌமியா, “அம்மா உங்களையே எதிர்த்து பேசுறான் பாத்தீங்களா? என்னடி உன்னால பேச முடியல என்று உன் தம்பியை பேச வச்சு பாக்குறியா? “என்று கத்த, வாசுகியோ, “உன்ன எல்லாம் சோறு போட்டு வளர்க்குறேன் பாரு என்ன சொல்லணும். நன்றிகெட்ட ஜென்மங்கள். “ என்று திட்ட சான்யாவோ, “மன்னிச்சிடுங்க பெரியம்மா, சௌமியா அக்கா அவன் தெரியாம பேசிட்டான்.அவன்ட நான் சொல்லி புரியவைக்குறேன்.“என்று சொல்லி விட்டு இதற்கு மேல் அங்கு நின்றால் சரண் அவளுக்காக அவர்களிடம் சண்டையிடுவான் என்று அறிந்த சான்யா சரணின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றாள். இதனை பார்த்த சௌமியாவோ, “உனக்காக பேச அவன் இருக்கான் என்ற தைரியத்தில்தானே நீ இருக்க? பார்ப்பம் எத்தனை நாட்களுக்கு இதெல்லாம் என்று. “சொன்னவளிற்கு சான்யா மேல் கடுப்பாக இருந்தது. வாசுகியோ, “திருப்ப வீட்டுக்கு தானே வரணும்,வாங்க உங்க இரண்டு பேரையும் பட்டினி போடுறேன். அப்போதான் திமிர் அடங்கும்.”என்றாள்.

இதெல்லாம் வீட்டில் வாசலின் வழியே வெளியேறி பஸ்ஸ்டாண்டை நோக்கி சென்றுகொண்டிருந்த சான்யா மற்றும் சரணின் காதுகளில் தெளிவாக கேட்டது. சரணோ, “அக்கா அப்போ நம்ம இன்றைக்கும் பட்டினிதான் போல!”என்று சொல்லி சத்தமாக சிரித்தான். சான்யாவோ, “எத்தனை தரம் உன்கிட்ட சொல்லிருக்கன் அவங்கள எதிர்த்து பேசாத என்று. கொஞ்சம் கூட பொறுமை இல்லைடா உனக்கு.“என்று சொல்ல, “சரி சரி விடு அக்கா இதெல்லாம் வழமையா நடக்குறது தானே.இப்போ நம்ம சாப்பாட்டுக்கு என்ன பண்றது என்று யோசிக்கணும்.நமக்கு சோறு முக்கியம்.“ என்று சொல்லி சான்யாவின் தலையில் செல்லமாக அடித்தான்.

அப்போதும் சான்யா அவன் மீது கோபமாகவே இருப்பது போல் பாவனை செய்ய, “ஓ!மேடம் என்மேல கோவமா இருக்கீங்க போல,”என்று சொல்லி அவன் தனது முகத்தை சோகமாக வைத்தபடியே வந்து பஸ்ஸ்டாண்டை அடைந்தனர் இருவரும். அவன் சோகமாக இருப்பதையும், அவளிடம் எதுவும் பேசாமல் இருப்பதையும் பார்த்த சான்யா அவன் அருகில் சென்று அவனின் தலையை கோதியபடி, “எனக்கு கோவம் எல்லாம் இல்லை. இப்படி முகத்தை வைக்காத பார்க்க சகிக்கவில்லை.“ என்றாள் சிரித்தபடி. அவனும் சிரித்துவிட்டு அங்கு நின்று அவளுடன் விளையாடிக்கொண்டிருந்த நேரம் அவர்களிற்கான பஸ்சும் அங்கு வந்து சேர அதில் ஏறி அவரவர் இடங்களை நோக்கி பயணித்தனர்.

சான்யாவையும், சரணையும் வசைபாடிய படியே வீட்டுவேலைக்கு புறப்பட ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தார் வாசுகி. சௌமியாவோ, அறையினுள் இருந்து பாட்டு கேட்டுக்கொண்டிருக்க,“வாசுகிஅக்கா,“என்று அழைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ருக்மணி.ஹாலில் நின்று தலைவாரிகொண்டிருந்த வாசுகி ருக்மணியை பார்த்து, “வாடி ருக்மணி எங்கபோயிருந்த? மார்க்கெட் போகும்போது பார்த்தன் வீடு பூட்டியிருந்துச்சு மூணுநாளா? “ என்று வினவ, “ அக்கா உனக்கும் தெரியும் தானே நம்ம செய்ற தொழில் அப்படி அப்பப்போ போலீஸ் ஸ்டேஷன் போய் அவங்கள கரெக்ட் பண்ணினாதான் நம்ம வாழமுடியும். இந்த முறை பொட்டலம் கொண்டுபோன பொண்ணு போலீஸ்கிட்ட மாட்டிக்கிச்சு. புடிச்ச போலீஸ்காரன் நீதி, நேர்மைனு பேசிட்டு இருந்தான். அவனை சமாளிச்சு பொண்ணயும் வெளிய எடுத்து சரக்கையும் காப்பாத்தி எடுக்க மூணு நாள் ஆச்சு அக்கா “என்று சொல்லி முடித்தாள் அவள்.



போதைப்பொருள் வியாபாரம் மட்டுமல்லாது பெண்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு விலைமாதுதான் இந்த ருக்மணி.அம்மணிக்கு பெரிய இடத்து சகவாசங்கள் இருக்க போலீசிடம் சிக்கினாலும் இலகுவில் தப்பித்துவிடுவாள்.அவளது சகவாசங்கள் மற்றும் அடியாள் பலத்தின் காரணமாவே அவள் வெளியில் சுதந்திரமாக நடமாடினாள்.இது அரசல் புரசலாக வாசுகிக்கு தெரிந்தாலும் அவசர தேவைக்கு அவள் கையெந்துவது ருக்மணியிடம் என்பதால் அவள் அதெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

இந்த நேரத்தில் வீட்டினுள் சடுதியாக நுழைந்த ஒரு கும்பல், “என்ன வாசுகி வட்டி பணமும் வரல அசலும் வரல, இப்போ பணத்த கொடுக்குறியா இல்ல.. “ என்று சொன்னபடி சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்து கதவில் அதிர்ந்தபடி நின்ற சௌமியாவை பார்க்க, அவனின் பார்வை அறிந்த வாசுகி ஓடிச்சென்று சௌமியாவின் முன்னே நின்று கொண்டு, “தம்பி உங்க பணத்த நான் எப்படியாவது தந்துர்றன்.” என்றப்படி கையை கூப்பினார். அவனோ, “ ஏம்மா உனக்கும் இவ்வளவு நாள் பணம் வாங்காம விட்டுவச்சதே தப்பு.மாசத்துக்குரிய வட்டியும் கட்டுறதில்லை வட்டி குட்டி போட்டு மொத்த பணம் அறுபதாயிரம் ரூபாய்.இன்னும் மூணு நாள் தான் டயிம் அதுக்குள்ள பணத்த குடுத்துடனும் இல்ல..... “ என்றபடி எட்டி சௌமியாவை பார்த்தவன், வாசுகியிடம், “ புரியும் எண்டு நினைக்குறேன்.” என்றப்படி வெளியேறிருந்தான்.

தலையை பிடித்தபடி அமர்ந்த வாசுகியோ,”கடவுளே! இப்போ நான் என்ன செய்வன்?நான் வீடுவீடாய் போய் பத்துபாத்திரம் தேய்த்து வாற பணமே ஒருநாளைக்கு ஐநூறுரூபாய் தான். அதை வைத்து எப்படி இந்த கடனை அடைப்பேன்?வாங்குன பணத்தை விட வட்டிபணம் அதிகமா சொல்றானுகளே பாவி பயலுகள். இப்போ என் பொண்ண வைத்து வேற மிரட்டுறானுகள்.”என்றப்படி அழதொடங்கிவிட்டார்.அவர் அழுவதை பார்த்த ருக்மணி,”அக்கா! அழாதீங்க பார்த்துத்துக்கலாம். “என்றாள்.

சட்டென்று யோசனை வந்தவளாக ருக்மணியை பார்த்த வாசுகி , “ எனக்கு கொஞ்சம் பணம் தந்து உதவி செய் ருக்மணி என் மகள்ட வாழ்க்கையை காப்பாத்துடி,எனக்கு அவனுகள் சொல்றத பார்த்தா பயமா இருக்கு “என்று இறைஞ்சி கேட்டாள்.ருக்மணியோ,”பணம் கொடுக்குறதுல பிரச்சனை இல்லை அக்கா. ஆனால் இந்த மூணு நாள்ல, போலீஸ்க்கு, மற்ற செலவு என்று இருந்த பணம் எல்லாமே செலவாகிட்டு. இப்போ கையில பணம் இல்லை அக்கா.”என்க, தன் நலத்தையும், தனது மகளின் நலத்தையும் மட்டுமே உயர்வாக எண்ணிய வாசுகி தனது கொடூரகுணத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். “இங்க பாரு ருக்மணி நீ எனக்கு சும்மா ஒன்றும் பணம் தர தேவை இல்லை. உன் தொழில்ல சான்யாவையும் சேர்த்துக்கோ.அது மூலமா வாற பணத்துல உன் கடனை கழித்துக்கோ.”என்று சாதாரணமாக சொன்ன வாசுகியை புரியாமல் பார்த்தாள் ருக்மணி.
 

pommu

Administrator
Staff member
சௌமியாவோ, “சனியன் இதுக்காவது பயன்படட்டும். நீங்க சொல்றது சரிதான் அம்மா இப்படி விட்டாலாவது அவள் திமிர் அடங்குதா என்று பார்ப்போம். ருக்மணி அக்கா அவளை உங்ககூடவே சேர்த்துக்கோங்க.”என்றாள் அவளும் ஒரு பெண் என்பதை மறந்து.ருக்மணியோ, “அக்கா என்ன சொல்றீங்க இரண்டுபேரும் அவ எப்படி இதுக்கு சம்மதிப்பா? “என்று கேட்க, “அவளை மிரட்டியாவது நான் சம்மதிக்க வைப்பன். அதை பற்றி நீ யோசிக்காத. பணத்தை மட்டும் ரெடி பண்ணி கொடு. “ என்று திமிராக சொன்னாள் வாசுகி. ருக்மணியோ, “நமக்கு எதுக்கு அடுத்தவன் வீட்டுகதைகள், நமக்கு பணம் வந்தா சரிதான். “என்று நினைத்தவர். “சரி அக்கா நான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுறன். யாரும் கஸ்டமர் கால் பண்ணா உங்களுக்கு சொல்றன் சான்யாவ அனுப்பி வைங்க. “ என்று சொல்லிக்கொண்டிருக்க அவளது போன் அலறியது. எடுத்து காதில் வைத்தபடி,”சொல்லுங்க ரகு சார்!”என்றவள், வாசுகி, சௌமியாவிடம் ஒரு தலையசைப்பை கொடுத்து, “முக்கியமான கால். நான் போகணும் வந்து பேசுறேன்.“என்று மெல்லிய குரலில் அவளுடன் போனில் தொடர்பில் உள்ள நபரிற்கு கேட்காதவாறு சொன்னவள் அங்கிருந்து வெளியேறிஇருந்தாள். வாசுகியும், சௌமியாவும் சான்யாவை வைத்து தமக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் அவரவர் வேலைகளை பார்க்க சென்றனர்.அவளின் உணர்வுகளுக்கு யாரும் மதிப்பு கொடுக்கவில்லை.

அவரவர் சுயநலத்திற்காக ஒரு அப்பாவிபெண்ணின் வாழ்க்கையை பலியிட காத்திருந்தனர் இவர்கள்......


 

Amutha novels

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 02
மூன்று அடுக்குகள் கொண்ட பிரமாண்ட வீடு அது,வாசலில் இரண்டு பென்ஸ்கார்கள், வீட்டை சுற்றி பெரியமதில்கள் என அமையப்பெற்ற அந்த வீட்டின் ஹாலில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தபடியே காபி அருந்திக்கொண்டிருந்தார் கந்தசாமி.
அவரை, “டாடி” என்று அழைத்தபடியே,ஐந்தரை அடி நீளமும்,மெலிந்திருந்தாலும் கட்டுமஸ்தான உடலமைப்பும், கழுத்துவரை வெட்டிவிடப்பட்டிருந்த முடியையும், அடர்ந்த தாடியையும் கொண்ட அவன் தன் ஷர்ட் பட்டன்களை களைந்தபடி கந்தசாமி அருகில் வந்தமர்ந்தான்.
அவனை பார்த்த கந்தசாமி,“வாப்பா ரகு, மீட்டிங் எப்படி போச்சு எல்லாம் சக்ஸஸ் தானே?விஷ்ணு மீட்டிங் வந்தானா?”என்று கேட்டபடியே , ஹால்லின் முன்னே அமைந்திருந்த மொர்டன் கிச்சன்னை பார்த்த அவரிற்கு அங்கு இருந்த வெற்றிடம் வழியே உள்ளே இருந்து காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த அந்தவீட்டின் சமயல்காரியானா சாந்தி கண்ணில் பட்டாள்.
உடனே,” ஏய் ரகுக்கு ஒரு காபி போட்டு கொண்டுவா.”என அதிகாரத்தொனியில் உரைக்க, சாந்தியோ அவரைப்பார்த்து,”சரிங்க ஐயா எடுத்திட்டுவாறன்.”என்று சொல்லி காய்கறி வெட்டுவதை நிறுத்திவிட்டு அவள் காபி போடும் வேலையை பார்க்க தொடங்கினாள்.
ரகுவோ கந்தசாமியை பார்த்து எதையோ சாதித்தவன் போல சிரித்துவிட்டு, “டாடி பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணுங்க. நம்ம நினைச்சது நடந்துடிச்சு. அமெரிக்ககம்பெனி சி. இ. ஒ ப்ராஜெக்ட் பைல சைன் பண்ணிட்டான். இந்த ப்ராஜெக்ட்டால கம்பனிக்கு எந்த இலாபமும் இல்லை. ஜஸ்ட் என்னோட தேவைக்காக இந்த டீல முடிச்சன். இதனால எனக்கு கோடி கணக்குல இலாபம் கிடைக்கும்.”என்று புன்னகையோடு சொன்னான்.
அடுத்த நொடியே அவன் புன்னகை மறைந்து முகம் சிவக்க,”டாடி அந்த விஸ்ணுவால இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆன அந்த கார்த்திக் ரொம்ப தொல்லையா இருக்கான். அவன் மட்டும் இன்றைக்கு நடந்த மீட்டிங்கிற்கு டைம்க்கு வந்திருந்தால், இந்த ப்ராஜெக்ட் சைன் பண்ண விட்டிருக்கவே மாட்டான். அவன் வந்த நேரம் பைல்ஸ் எல்லாமே சைன் பண்ணி அந்த அமெரிக்காக்காரன் கம்பெனில இருந்து போய்ட்டான். கார்த்திக் ப்ராஜெக்ட் பைல்ஸ்ல இருக்குற டீல்ச படிச்சு பாத்திட்டு வானதுக்கும் பூமிக்கும் குதிச்சான்.இந்த ப்ராஜெக்ட்டோட உண்மையான விபரம் அவனுக்கு தெரிஞ்சா கண்டிப்பா இத நடக்க விட மாட்டான் அந்த கார்த்திக்.”என்றான் ரகு முகத்தை கோபமாக வைத்தபடி.
இதே நேரத்தில், காரை ஆபீஸ்சில் இருந்து வெளியே எடுத்தப்படி, ப்ராஜெக்ட் பைல்களுடன் கந்தசாமியின் வீட்டுக்கு விரைந்துகொண்டிருந்தான் கார்த்திக்.அவனுக்கு ரகுவிலும்,கந்தசாமியிலும் கொலைவெறி கிளம்பியது.அவன் அறிவான் இந்த ப்ராஜெக்ட்டில் இருக்கும் விடயங்களிற்கு விஷ்ணு சம்மதித்திருக்க மாட்டான் என்று. விஷ்ணுவை பற்றி நன்கு அறிந்தவன் கார்த்திக். அவனது எண்ணங்கள், நடத்தைகளில் அவன் மாற்றதை ஏற்படுத்தியது போல் காட்டினாலும்,அவனது குணம் என்றுமே மாறாது என்பதில் கார்த்திக் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தான்.
ரகு ஏதோ தில்லுமுல்லு செய்துதான் அவனிடம் சைன் பெற்றிறுப்பான் என்று எண்ணிய கார்த்திக், ரகுவிடம் கம்பெனியில் எல்லோர் முன்னாலும் வைத்து பேச விரும்பாதவனாக அவனது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தான். அவன் அறிவான் கம்பெனியில் எல்லோர் முன்னிலையில் வைத்து பேசினால் பல தனிப்பட்ட விஷயங்கள் கசியும் என்பதை அதை தவிர்க்கவே கம்பெனியில் தனது கோபத்தை அடக்கி கொண்டிருந்தான் கார்த்திக்.
காலையில் கார்த்திக், விஷ்ணுவை பார்த்து விட்டு கம்பெனியை அடைவதற்குள் அங்கு ப்ராஜெக்ட் பைல் சைன் பண்ண பட்டிருந்தது. அது அவனுக்கு ரகுமேல் சந்தேகத்தை உண்டாக்கியது.கார்த்திக் அங்கு வந்து சேரும் முன்னே அவன் மீட்டிங்கை நடத்தி முடித்திருக்கின்றான் என்றால் கண்டிப்பாக அதில் ஏதோ பிராடு வேலை செய்திருப்பான் என்று கார்த்திக்கிற்கு தெரியும். அதனாலே ப்ராஜெக்ட் பைலை எடுத்து படித்தவனிற்கு அதிர்ச்சி தான்.அதில் கம்பனிக்கு எந்த விதமான இலாபமும் இல்லை. அந்த ப்ராஜெக்ட்டை நடத்த அவர்கள் கேட்டிருந்த இடம் ஒரு தனியார் காணி.எல்லாமே அவனுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்த, கூகுளின் துணையை நாடினான் அவன்.
அந்த அமெரிக்ககம்பெனி பற்றி தேடும் போது அந்த கம்பெனியிற்கு நிறைய பிளக் மார்க்ஸ் இருப்பதை அறிந்து கொண்டான் அவன். அது மட்டுமல்லாது அந்த கம்பெனி இல்லீகல் ஆக்ட்டிவிட்டியில் ஈடுபடுவதற்கான அறிகுறியும் அங்கு இருந்தது. அத்தோடு நிறுத்தி விடாது நட்பு கரம் கொடுக்கும் கம்பெனிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் சொன்ன தகவல்களும் அந்த அமெரிக்ககம்பெனி குறித்து தவறாகவே இருந்தது. இதை எல்லாம் கேட்ட கார்த்திக்கிற்கு ஏதோ தவறாக இருப்பது போல் தோன்றியது. ரகு எது செய்தாலும் அவன் சுயநலம் மட்டுமே அதில் இருக்கும் அவ்வாறே இதையும் நினைத்தான் கார்த்திக்.
காரில் ரகுவின் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த கார்த்திக்கினது கையடக்க தொலைபேசி அலற, எடுத்து போன் ஸ்கிரீனைப் பார்த்த அவன், போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டபடி ,”காவியா, நான் ஒரு சின்ன வேலையா வெளிய போறன். நீ விஷ்ணுட வீட்டுக்கு போ, நான் அங்க வந்து உன்ன பார்க்கிறேன்”என்று சொல்லிவிட்டு பதிலை கேட்காமலே போனை கட் செய்துவிட்டான்.
மறுபக்கம் அவள் வீட்டின் வெளியே நின்றிருந்த பெரிய மரத்தின் கீழ் அவள் மஞ்சள்நிற பைக்கில் சாய்ந்தபடியே கார்த்தியின் பதிலை கேட்டு அவன் குரலில் மாற்றத்தை உணர்த்த காவியா, “டேய் என்னடாச்சு?” என்று கேட்பதற்கு முன்பே போன் கட் செய்யப்பட, “என் முயல்குட்டிக்கு என்னாச்சு? இப்படிஎல்லாம் பண்ண மாட்டானே, சரி எதோ ஆபீஸ் டென்ஷன் போல நம்ம அந்த விஷ்ணுட்ட போய் கேட்டுக்கலாம்.”என்றபடி வீட்டில் இருந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டு,அங்கு நின்று பூந்தொட்டிகளிற்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த அவள் அம்மா சுசிலாவிடமும் , அவர் பின்னால் நின்று நைட் தனது நட்புவட்டாரங்களுடன் பார்ட்டி செல்ல அனுமதி வாங்கிக்கொண்டிருந்த அவள் அப்பா மஹேந்திரனிடமும்,“டாட்டா....”என்று கத்தியபடியே புறப்பட்டிருந்தாள் காவியா.காவியாவின் அம்மாவான சுசிலா, “பார்த்து போய்ட்டு வா தங்கம்.”என்றதும் அவள் அப்பாவான மஹேந்திரன், “டாட்டா பேபிமா.”என்றதும் அவள் பைக்கை எடுத்த வேகத்திற்கு அந்த வார்த்தைகள் காற்றில் கரைந்து போயின.
ஐந்தடி நீளமுடைய அழகான பெண்ணவள்தான் காவியா. எப்போதும் பட்டாம்பூச்சி போல சிறகடித்து பறப்பவள். வீட்டில் ஒரேயொரு செல்லப்பிள்ளை .அவளின் முடிவுகளிற்கு வீட்டில் எப்பொதும் எதிர்ப்பு இருந்ததில்லை.குறும்பான பெண்ணாக இருந்தாலும்,சரியாக யோசித்து முடிவெடுப்பதிலும், ஏனையவர்களின் வளர்ச்சிக்கான சரியான ஆலோசனைகளை வழங்குவதிலும் சிறந்தவளாக திகழந்தாள் அவள்.
இந்த நேரம் கந்தசாமியின் வீட்டில், ரகுவின் கோவத்தை கண்டுகொண்ட கந்தசாமி, “அவன் கிடக்குறான், அநாதபையன். அவன் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை நமக்கு,நீ பிஸ்னஸ்ல மட்டும் கவனத்த வை அவனை பத்தியெல்லாம் யோசிக்காத. அவன் நம்ம கால்தூசிக்கு சமம்.”என்றவர்,”விஷ்ணுவ போய் பார்த்தியா?”என்று கேட்க ரகுவோ, நக்கலான புன்னகையுடன், “பார்த்தன் பார்த்தன், நேற்று நைட் அவன் வீட்டுக்கு போயிருந்தன், ப்ராஜெக்ட் பைல்ல சைன் வாங்க.குடிச்சுட்டு புலம்பிட்டு இருந்தான்.அவன் நிலைமையை பார்த்துட்டு எனக்கே கொஞ்சம் பாவமா போச்சு டாடி.” என்று சொல்லி கைதட்டி சிரித்தான் அவன்.
கந்தசாமியோ, “அவனை பற்றி எனக்கு நல்லா தெரியும்டா எவ்வளவு அடிச்சாலும் திரும்ப எழுந்து நிற்ப்பான் , அவங்க அம்மா, அப்பா இறந்துபோன பிறகு கம்பெனி படுத்துகிச்சு,நானும் இனி இவனை வைத்திருக்குறது யூஸ் இல்லை என்றுதான் நினைத்தேன்.ஆனால்,அவன் படிப்பெல்லாம் முடிச்சு கம்பெனி பொறுப்ப எடுத்து ஐந்து வருஷங்கள் இரவுபகலா உழைச்சு கம்பெனிய இன்னைக்கு டாப்பைவ் பொசிஷன்ல கொண்டுவந்துருக்கான்.அவனுக்கு இப்போ ஏற்பட்ட இழப்பு ரொம்ப பெரிது அதனால அவன் ஜஸ்ட் ஸ்டாப் ஆகி நிற்குறான் அவ்வளவுதான். அவன் திரும்பி ஓட தொடங்கின நம்ம நிலைமை மோசமாகிடும். என்றார்.
கந்தசாமி சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த ரகுவோ, “டாடி அவன் கூடவே வளர்ந்தவன் நான் உங்கள விட அவனை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவன் வலி,டிப்ரஷன் எல்லாமே இன்னும் கொஞ்ச நாள்தான். அவனுக்கு நம்ம இரண்டுபேரையும் புடிக்கும். அவங்க அம்மா, அப்பா இறந்த பிறகு நீங்க அவனை எடுத்து வளர்த்தீங்க என்ற நன்றியுணர்ச்சி. அதுக்காக அவன் சொத்தையே நமக்கு எழுதி வைக்குற அளவுக்கு அவன் முட்டாளில்லை. அவனோட சொத்தை அடைய நம்ம போட்ட பிளானும் சுதப்பிடிச்சு.அது மட்டுமில்லை டாடி, நம்ம கம்பெனி விஷயத்துல பண்ற சின்னச்சின்ன மோசடி அவனுக்கு தெரிஞ்சும் அவன் கண்டுக்குறதே இல்லை. அதுக்கு ரிசன் அவனுக்கு பணம் என்றது பெரிய விஷயம் இல்லை. ஆனால் நம்ம பண்ண மற்ற விஷயங்கள் அவனுக்கு தெரிஞ்சா ருத்ரதாண்டவமே ஆடிடுவான். அவன்கிட்ட ரொம்ப உஷாரா இருக்கணும்.சரியான கேடி அவன்.”என்றான்.
கந்தசாமியோ, “ஆமாம் அவன் அப்பன் மூளை அப்படியே. அவன் சாகுறத்துக்கு முன்னால எழுதி வைத்த உயிலாலதான் இன்று வரைக்கும் நம்ம விஷ்ணுக்கு பயந்து இருக்க வேண்டி இருக்கு, இல்லை என்றால் எப்போவோ அவன்கிட்ட இருந்து சொத்தை எழுதிவாங்கியிருக்கலாம்.”என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டின் முன் வந்து நின்றது கார்த்திக்கின் உடைய கார்.
காரில் இருந்து இறங்கிய கார்த்திக் காரின் கதவை அடித்துச்சாத்திவிட்டு வீட்டினுள் நுழைய, கார் வந்த சத்தத்திலும், கார் கதவை அடித்துச்சாத்திய சத்தத்திலேயும் திரும்பி கார்த்திக்கை பார்த்தனர் கந்தசாமியும் ரகுவும். ரகுவோ,”வா கார்த்திக். என்ன ரொம்ப கோவமா இருக்க போல? உனக்கும் இதெல்லாம் செட் ஆகாதுடா.நீ டம்மி பிஸ்டா.”என்று சொல்ல கார்த்தியோ, “நான் டம்மிபிஸ் ஆவே இருந்துட்டு போறன், ஆனால் உன்னப்போல துரோகி இல்லடா. விஷ்ணு உங்க இரண்டு பேரையும் தலையில வச்சு தாங்குறான், நீங்க என்ன கேட்டாலும் செய்றான், உங்கள நல்லாத்தானே பார்த்துக்குறான். நீங்க மட்டும் ஏன்டா அவனை எதிரியா பார்க்குறீங்க?”என்று கேட்டான்.
ரகு பேச முற்பட அவனை தடுத்த கந்தசாமி, “நீ யாருடா இதெல்லாம் கேட்க? எங்க வீடேறி வந்து எங்களையே கேள்வி கேட்கிற, விஷ்ணுவே எதுவும் சொல்றதில்லை நீ எதுக்குடா துள்ளுற? விஷ்ணு எப்போதுமே எங்க அடிமைதான் உன்னால எதுவுமே பண்ண முடியாது.”என்று திமிராக சொல்ல, “அவன் நீங்க எது பண்ணாலுமே கண்டுக்குறதில்லை என்றுதானே இந்த ஆட்டம் போடுறிங்க?உங்களுக்கு அவன் கம்பெனி, சொத்துக்கள் தானே வேண்டும்? உங்களால முடிஞ்சா அவன்கிட்ட இருந்து அதை எடுத்துக்கோங்களேன்.”என்று நக்கலாக சொன்னான் கார்த்திக்.
கந்தசாமியும், ரகுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள மீண்டும் ஆரம்பித்த கார்த்திக், “அவன் ஒன்றும் உங்க அடிமை இல்லை. அவனுக்கு உங்க இரண்டுபேர் மேலயும் பாசம், அவங்க அம்மா, அப்பா இறந்த பிறகு நீங்க வளர்த்திங்க என்ற நன்றியுணர்ச்சி அதை தாண்டி வேற ஒன்றுமே இல்லை. அதை நீங்க யூஸ் பண்ணிக்குறீங்க அவ்வளவுதான். நீங்க கம்பெனில பண்ற மோசடி எல்லாமே தெரிஞ்சும் அவன் கண்டும்காணாத மாதிரி இருக்க காரணமே நன்றியுணர்ச்சி தான்.அப்பனும், மகனும் என்றாவது அவன்கிட்ட பெரிய தப்பா பண்ணி கையும் களவுமாக மாட்டுவீங்க. அன்றைக்கு அவன் சுயரூபத்தை பார்ப்பீங்க இரண்டுபேரும்.அவனை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.”என்றவன், அவன் கையில் கொண்டுவந்த பைலை ரகுவின் முகத்தில் விட்டெறிந்து,”இப்போ கூட நீ அந்த அமெரிக்க கம்பெனி டீல ஓகே பண்ணிட்டல,அந்த அமெரிக்கா கம்பெனியோட ப்ராஜெக்ட்பைல படிச்சுப்பார்த்தன். அவனுகள் ப்ராஜெக்ட் பண்ண கேட்டிருக்குற லேண்ட் ஒரு பிரைவேட் லேண்ட், அங்க முதியோர்மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லமும் இருக்கு,அது மட்டும் இல்லை அந்த கம்பெனியோட பாக்ரௌண்ட்டும் சரியில்ல.இங்க நிறைய கம்பெனிஸ் இந்த ப்ராஜெக்ட்ட பண்ண மாட்டம் என்று ரிஜெக்ட் பண்ணிருக்கு அப்படி இருக்க நீ இந்த ப்ராஜெக்ட்ட ஓகே பண்ணிருக்க.நீயே எல்லா முடிவையும் எடுத்திருக்க எங்க யார்கிட்டயும் எந்த டீடெயில்ஸ்சும் நீ சொல்லல.விஷ்ணுக்கு கம்பெனியோட பெயர் ரொம்ப முக்கியம். அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா இந்த ப்ராஜெக்ட் நடக்காது.நீ ஏதோ தில்லுமுல்லு பண்ணித்தான் நேற்று அவன்கிட்ட சைன் வாங்கியிருப்ப.“என்றான்.
அவனை முறைத்து பார்த்த ரகுவோ,”இந்த விஷயத்துல தேவைஇல்லாம நீ மூக்கை நுழைக்காத நான் இத டீல் பண்ணிக்குறேன்.” என்று சொல்லிக்கொண்டிருந்த நேரம் சாந்தியோ, “ஐயா காபி “என்று காபி கப்பை ரகுவிடம் நீட்ட அவளை முறைத்த ரகு காபி கப்பை தரையில் தட்டிவிட்டு உடைத்திருந்தான். மேலும் தொடர்ந்த அவன்,கார்த்திக்கை பார்த்து,”ஆமாடா எதுவுமே சொல்லாமல் மறைத்துத்தான் நேத்து சைன் வாங்குனன்.நான் சைன் வாங்கும் போது அவன் போதைல இருந்தான்.இப்போ என்ன அதுக்கு?”என்று கோபமாக கத்த, கார்த்திக்கோ, “நீ நினைப்பது போல இந்த ப்ராஜெக்ட் நடக்காது. விஷ்ணுக்கு டீடெயில்ஸ் தெரிந்தால் இதுக்கு ஒத்துக்கவும் மாட்டான். உங்க இரண்டு பேரோட பிளான் எதுவுமே நடக்காது.முக்கியமா நான் நடக்க விட மாட்டேன் ரகு.”என்றப்படி கந்தசாமி மற்றும் ரகுவை பார்த்து முறைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவன் காரை எடுத்துக்கொண்டு விஷ்ணுவின் வீட்டை நோக்கி விரைந்தான்.

அவனை பேசியதை பார்த்து ஆத்திரம் அடைந்த ரகு, அங்கிருந்த பூந்தொட்டியை தூக்கி ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி பெட்டியின் மேல் எறிந்ததில் தொலைக்காட்சி பெட்டி சுக்குநூறானது.காபி கப்பை தட்டி விட்டு உடைத்ததில் இருந்தே வாயை பிளந்து கொண்டிருந்த சாந்தி இதை பார்த்து வாயில் கை வைத்தபடி நிற்க, கந்தசாமியோ,”நீ போஸ் குடுக்க உன்ன யாரும் இங்க படம் பிடிக்க போறதில்ல. உன் வேலைய பாரு, இதெல்லாம் கிளீன் பண்ணு.”என்று சாந்தியிடம் சொல்லிவிட்டு ரகுவை கூட்டிக்கொண்டு மாடியில் இருக்கும் அவர் அறைக்கு சென்றார்.
 
Last edited:

Amutha novels

Well-known member
Wonderland writer
இதே நேரத்தில் ஸ்கூல் முடிந்து பஸ்ஸ்டாண்டிற்கு வந்த சரண் சான்யாக்காக அங்கு காத்திருந்தான். அவனின் பாடசாலை மற்றும் சான்யாவின் காலேஜ் அருகருகே அமைந்திருக்க,சான்யா வரும் வரை காத்திருந்து ஒன்றாக பஸ் ஏறுவதே வழக்கம்.
அங்கு நின்று கொண்டு முன்னே இருந்த பாஸ்கெட்பால் மைதானத்தை பார்த்தவனுக்கு அர்ஜுனுடைய நியாபகங்கள் சுழல தொடங்கின.
ஸ்கூல் முடித்து வந்தவுடன் அர்ஜுனை பார்க்க சென்று விடுவான் சரண். அர்ஜுனும் அவன் என்ன வேலையில் இருந்தாலும் அதை அனைத்தையும் விட்டுவிட்டு சரணுடன் நேரத்தை செலவிடுவான்.இருவரும் சேர்ந்து பல புகைப்படங்களை எடுத்து கொள்வார்கள்.அவர்கள் செலவிடும் நேரம் குறைவாயினும் அது அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நேரங்கள். இவ்வாறுதான் ஒரு நாள் சான்யாவை கூட்டிச்சென்று அர்ஜுனிடத்தில் அறிமுகம் செய்தான் சரண்.
சான்யா யாரிடமும் அதிகம் பேசாத அமைதியான பெண் ஆகையால் அவள் ஆரம்பத்தில் அர்ஜுனுடன் அவ்வளவு பேசவில்லை. சரணும் அவனும் பேசுவதை நின்று வேடிக்கை பார்ப்பாள். அவர்கள் வெளியில் எங்கேயும் செல்ல அழைத்தாலும் பயத்தில் மறுத்துவிடுவாள் அவள். காலப்போக்கில் அர்ஜுனது நடத்தையும், அவன் மரியாதையாக அவளை நடத்துவதும் சான்யாவிற்கு பிடித்துப்போக, இருவரும் பேசி நல்ல நண்பர்கள் ஆகிருந்தனர்.
அவன் மீது அவளுக்கு பயம் ஏதுமே இருக்கவில்லை.அவனிடம் பாதுகாப்பை உணர்ந்தாள் அவள்.இருவரும் தங்கள் வாழ்கை சம்பவங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் நட்பாகி போனார்கள்.இவ்வாறு ஒரு நாள்தான் சான்யாவிடம் பேசிய அர்ஜுன் சரணை பாஸ்கெட்பால் கோச்சிங் சேர்த்துவிடுவதாகவும் அவனுக்கான மொத்த செலவையும் அவனே பார்த்துக்கொள்வதாகவும் கூற சான்யா அதை ஏற்க மறுத்தாள். அர்ஜுன் தான் அவளை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்திருந்தான்.
அவர்கள் மூவரும் காபிஷாப், ஐஸ்கிரீம் ஷாப், பீச் என அனைத்து இடங்களிற்கும் சென்று நேரத்தை செலவிடுவார்கள்.சான்யா மற்றும் சரண் வீட்டிற்கு தாமதமாகி சென்று வாசுகியிடம் திட்டும் வாங்கி கட்டுவார்கள். ஆனால் அவர்களிற்கு அர்ஜுனுடன் செலவிடும் நேரம் பிடித்திருந்தது. அவன் அவர்களை அவ்வாறு தாங்கி கொண்டிருந்தான். அவர்கள் கேட்க முன் அவர்களுக்கான தேவையை அறிந்து நிறைவேற்றி விடுவான் இவ்வாறு இவர்கள் நட்பு கிட்டத்தட்ட ஒருவருடம் தொடர்ந்தது. அவ்வாறு ஒரு நாளில் தான் சரணை அவன் பாஸ்கெட் பால் கோச்சிங் சேர்ப்பதாக சொன்ன அந்த நாளும் வந்திருக்க அவனுக்காக காத்திருந்தனர் சான்யா மற்றும் சரண். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ அவனது இறப்பு செய்திதான். அவனுக்காக அவர்கள் பாஸ்கெட்பால் மைதானத்தின் வெளியே காத்திருக்க அங்கு வந்த அர்ஜுனுடன் பாஸ்கெட்பால் விளையாடும் நண்பன் ஒருத்தன் அர்ஜுன் இறந்த விஷயத்தை சொல்ல அவர்களால் அதை நம்ப முடியவில்லை.
அவர்கள் நம்பாமல் இருக்க அவர்கள் பாஸ்கெட்பால் மைதானத்தில் ஒட்டுவதற்காக எடுத்து வந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அவர்களிடத்தில் காட்டினான் அவன். சரணுக்கும் சான்யாவிற்கும் அதை பார்த்து கண்ணீர் பெருக்கெடுத்தது. வீதி என்றும் பார்க்காது அவர்கள் அழுது தீர்த்தனர். அதை பார்த்த அங்கிருந்த பாஸ்கெட்பால் வீரர்கள் பலரிற்கு தானாகவே கண்களில் இரண்டுசொட்டு கண்ணீர் வந்தது. அவர்கள் ஒன்றாக இருப்பதையும் மணிகணக்கில் நேரம் செலவிடுவதையும் நேரில் பார்த்தவர்கள் அவர்கள். அவர்களிற்கு தகவல் சொன்னவனிடம் சரண் அர்ஜுனது சடலத்தை பார்க்க கூட்டிச்செல்லுமாறு சொல்ல, அர்ஜுன் ஆக்சிடென்ட்டாகி பள்ளதாக்கில் இருந்து அடித்துச்செல்லும் நீர்வீழ்ச்சியில் விழுந்ததால் அவன் சடலம் கிடைக்கவில்லை. அவன் பைக் மட்டும் தான் கிடைத்தது என்று சொன்னான் அவன்.
அதை கேட்ட அவர்களிற்கு இன்னும் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. அன்று இரவு முழுக்க அவர்கள் கதவை பூட்டிவிட்டு, வெளியே அவர்களின் பெரியம்மா, சௌமியாவிற்கு கேட்காத வண்ணம் அழுது கொண்டிருந்தனர். இன்று வரையில் அர்ஜுனது இழப்பு அவர்களுக்கு பெரிய ரணமே. அவர்கள் அந்த பஸ்ஸ்டாண்ட், பாஸ்கெட்பால் மைதானம், காபி ஷாப், பீச் என அவர்கள் நேரம் செலவிட்ட இடங்களை பார்க்கும் போதும் அர்ஜுனை நினைத்து கொள்வார்கள். அர்ஜுன் அவர்களுடன் இல்லை என்றாலும் அவனின் நினைவுகளுடன் இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கின்றனர் சான்யாவும் சரணும்.
அர்ஜுனுடனான நினைவுகளை மீட்டிக்கொண்டே சாலையை கடந்து கொண்டிருந்த சரண் மறுபக்கம் லாரி வருவதை கவனிக்கவில்லை. இதை பார்த்துக்கொண்டிருந்த சரணின் நண்பன் தர்ஷன், “சரண்!.... லாரி டா தள்ளி வா..”என்று கத்தியதை சரண் சுதாகரிக்க முன்பே லாரியில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டான். லாரியும் அடித்துவிட்டு நிற்காமல் சென்றிருந்தது. இதை பார்த்த சரணின் நண்பன் தர்ஷன், “சரண்...... “என்றபடி ஓடி வந்து அவன் அருகில் அமர்ந்து, “சரண்.. சரண்..”என்று அழைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பதற்றத்தில் வார்த்தைகள் வரவில்லை. அங்கே நின்ற மக்களும் அவனை சூழ்ந்து கொண்டனர்.
சாலையில் விழுந்து கிடந்த சரணின் தலையில் இருந்து இரத்தம் பொலபொல என வழிந்துகொண்டிருந்தது. அவன் கை மற்றும் கால்களில் சிராய்ப்பு காயங்கள் இருக்க வலியில் துடித்துக்கொண்டிருந்தான் அவன். கூட்டத்தில் நின்ற ஒருத்தனோ,”ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க.”என்று கூற அங்கிருந்த மக்கள் அவனை பாவமாக பார்த்தப்படி நின்றிருந்தனர்.
அப்போதுதான் காலேஜ் முடித்துவிட்டு பஸ்ஸ்டாண்டை நோக்கி வந்த சான்யா அங்கே கூட்டம் கூடிருப்பதை பார்த்து “என்னவா இருக்கும்?”என்று எண்ணியபடி சென்றாள். அங்கே கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணிடம், “என்னக்கா ஆச்சு?”என்று வினவ அவளோ, “அக்சிடன்ட் மா, ஒரு பையன லாரி அடிச்சுடிச்சு. பாவம் பையன்.”என்றவர் மீண்டும் கூட்டத்தில் எட்டி நின்று பார்க்க தொடங்கிவிட்டார். பையன் என்று அவர் சொன்னதை கேட்டு பயந்த அவள் சரணை தேட,அவன் அவள் கண்களுக்கு புலப்படவில்லை. “சரி நம்ம கிரௌண்ட்ல போய் பார்க்கலாம். ஒரு வேளை அங்க உக்கார்ந்து இருப்பான்.” என்ற படி அங்கு செல்ல முற்பட,”சான்யா அக்கா!!!”என்று அழைத்து கொண்டு கூட்டத்தின் மத்தியில் இருந்து வெளியே வந்தான் தர்ஷன்.
சான்யாவோ, “சரண் எங்கடா தம்பி?”என்று கேட்க அழுதுகொண்டிருந்த தர்ஷனோ, “அக்கா சரணுக்குதான் அக்கா அக்சிடன்ட் ஆச்சு.”என்று விம்மியபடியே சொல்ல, அதிர்ந்து நின்றவளது கண்களில் இருந்து நீர் தாரைதாரையாக வழிந்துகொண்டிருந்தது. மீண்டும் தர்ஷன் அவள் கையை பிடித்து உலுக்கியதிலேயே நினைவுக்கு வந்தவளாக,”சரண்....” என்று கத்தியபடியே கூட்டத்தை விலக்கி கொண்டு உள்நுழைந்தாள் அவள். அங்கு அரை மயக்கத்தில, வலியில் துடித்துக்கொண்டிருந்த சரணை பார்த்தவள் அவனை மடியில் போட்டுக்கொண்டு கதற ஆரம்பித்துவிட்டாள். “எந்திரிடா தம்பி, என்ன பாருடா. அக்காக்கு உன்ன விட்டா யார்டா இருக்கா? எந்திரிடா தம்பி...” என்ற அவளது கதறல் தர்ஷன் உட்பட அங்கிருந்த அனைவர் கண்ணிலும் நீர் வர செய்தது.
இந்த சமையத்தில் அங்கிருந்தவர்களால் ஏற்கனவே ஆம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்க ஆம்புலன்ஸ்வண்டியும் அங்கு வந்து சேர்ந்திருந்தது.அங்கிருந்த சில வாலிபர்கள் சரணை தூக்கி ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்ற, கதறிஅழுதபடியே சான்யாவும் கூட ஏறிக்கொண்டாள்.தர்ஷனும் கூட வருவதாக சொல்ல அவனை கஷ்டப்படுத்த விரும்பாத அவள் அதை மறுத்துவிட்டாள்.வைத்தியசாலை செல்லும் வழி முழுக்க சரணின் கைகளைப் பற்றி,கண்களை மூடியபடி கடவுளை பிராத்தித்து அழுது கொண்டே சென்றாள் அவள்.சிறிது நேரத்தில் வைத்தியசாலையும் வந்தடைய அங்கு “ஏ. கே. எம் வைத்தியசாலை”என்று பெரிய பெயர் பலகை இடப்பட்டிருந்தது.அவள் அதை எல்லாம் பார்க்கவும் இல்லை தம்பியை காப்பாற்றி விட்டால் போதும் என்ற எண்ணத்துடன் ஆம்புலன்ஸ் வண்டியில் இருந்து தூக்கி எடுக்கப்பட்டு ஸ்டேச்சரின் மூலம் உள்ளே அழைத்துச்செல்லப்பட்ட சரணோடு இழுபட்டு சென்றாள் அவள்.
உள்ளே கொண்டுசெல்லப்பட்ட சரணை பரிசோதனை செய்த டாக்டர் மாலினி, “ஐ.சி. யுக்கு கொண்டு போங்க, நர்ஸ் பிளட் எல்லாம் கிளீன் பண்ணி முதலுதவி பண்ணுங்க. நான் வரேன்.”என்று சொல்லி விட்டு திரும்பி பக்கத்தில் சல்வார் முழுக்க இரத்தகறைகளுடன் நின்றிருந்த சான்யாவை பார்த்து “என்னமா ஆச்சு?நீங்க என்ன உறவு இவங்களுக்கு?”என்று கேட்க, அழுத்துகொண்டு நின்ற சான்யா, “டாக்டர் இவன் என்னோட தம்பி, அக்சிடன்ட் ஆச்சு டாக்டர்.”என்று விம்மிய படியே சொல்ல டாக்டர் மாலினியோ,”ஓ!அக்சிடன்ட் கேஸ் ஆஹ்? முன்னால இருக்குற ரிசெப்சன்ல போய் டீடெயில்ஸ் கொடுத்து போர்ம்ம நிரப்பிட்டு, அக்சிடன்ட் கேஸ் என்றதால போலீஸ்க்கும் இன்போர்ம் பண்ணிடுங்கமா.” என்று சொன்னவர் ஐ. சி. யு நோக்கி செல்ல முற்ப்படும் போது, “டாக்டர் என் தம்பிய காப்பாத்திடுவிங்கதானே?அவனுக்கு ஒன்னும் ஆகாதே? “என்று பயந்தபடி கேட்டாள் சான்யா. அவரோ, “ஒன்றும் நடக்காதுமா காப்பாத்திடலாம். நீங்க போய் டீடெயில்ஸ் குடுத்து, கம்பளைன் குடுங்க போலீஸ்ல அப்போதான் நாங்க ப்ரோப்பரா டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ண முடியும்.”என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றார் அவர்.
சிறிது நேரம் சுவரில் சாய்ந்து நின்று அழுதுகொண்டிருந்த சான்யா,கண்களை துடைத்துவிட்டு ரிசெப்ஷனை நோக்கி சென்றாள். அங்கு ரிசெப்ஷனில் கம்பியூட்டர் முன்னே நின்றுகொண்டுருந்த பெண்ணிடம்,”தம்பி... அக்சிடென்ட்...” என்று இழுக்க, அந்த பெண்ணோ, “என்ன மேடம் அக்சிடண்ட் கேஸ்சா? டீடெயில்ஸ் குடுக்க சொன்னாங்களா? “என்று கேட்க சான்யாவோ, “ஆமா”என்று சொல்ல, அவள் ஒரு போர்மை கொடுக்க போனவள், அவள் கைகள் மற்றும் உடையில் முழுக்க இரத்தகறைகளை கண்டுகொண்டு,”நீங்க டீடெயில்ஸ் சொல்லுங்க மாம் நான் நிரப்புறன்.பெசன்ட்டோட பெயர் என்ன?, வயசு என்ன?.......” என்று அனைத்து விடையங்களையும் கேட்க சான்யாவோ,”பெயர் சரண், வயசு பதினாறு.... “என்று சொல்ல தொடங்கி அனைத்து ப்ரோசிஜர்களையும் முடித்திருந்தாள்.
இதே சமயம், “எங்க போய் தொலைந்ததுகள் இன்னும் வீடு வந்து சேரல?“என்று சௌமியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் வாசுகி.சௌமியாவோ, “என்ன அம்மா புதுசா அக்கறை எல்லாம் அதுகள் மேல? “என்று கேட்க,”வாய மூடு சௌமி அக்கறை எல்லாம் ஒன்றும் இல்லை.அவளை வைத்துத்தான் நான் உன் வாழ்க்கையை அமைக்கணும். அவள மிரட்டியாவது நான் ருக்மணிகூட அவளை அனுப்பி வைப்பன். அப்போதான் நம்ம நாலு காசுபணம் பார்க்கலாம். இப்போதைக்கு பெரிய தலைஇடியே இந்த சரண் பையல் தான்.அக்காக்கு ஒன்று எண்டா சண்டைக்கு வந்து நிப்பான் அவன். அவனை சமாளிக்க என்ன வழி என்று பார்க்கணும் முதல்ல. “என்று வாசுகி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சௌமியாவின் கையடக்க தொலைபேசி அலறியது.

அடுத்து நடக்கப்போவது அடுத்து வரும் அத்தியாயங்களில்.....
 
Last edited:
Status
Not open for further replies.
Top